டுவிட்டர் பதிவிற்கு ராகுல் காந்தி மன்னிப்பு!

நரேந்திரமோடி போல் இல்லாமல் நான் மனிதனாக செயல்பட விரும்புகிறேன் என்ற தவறான தகவலை டுவிட்டர் மூலம் பதிவிட்டதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.   

Last Updated : Dec 6, 2017, 05:24 PM IST
டுவிட்டர் பதிவிற்கு ராகுல் காந்தி மன்னிப்பு! title=

நரேந்திரமோடி போல் இல்லாமல் நான் மனிதனாக செயல்பட விரும்புகிறேன் என்ற தவற தகவலை டுவிட்டர் மூலம் பதிவிட்டதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். 

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விலைவாசி உயர்வு குறித்துநேற்று கூறிய போது;- தற்போது சமையல் எரிவாயு, பருப்பு வகைகள், தக்காளி, வெங்காயம், பால் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலைகளை பதிவிட்டிருந்தார். அதில் பருப்பு விலை ரூ. 45 லிருந்து ரூ. 80 ஆனதைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதன் விலையேற்றம் தற்போது  77% ஆகும் ஆனால் அவர் அதை 177% என பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட பா ஜ க தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதன் பின் அந்த டிவீட்பதிவு  பிறகு நீக்கப்பட்டு சரியான புள்ளி விவரத்துடன்கூடிய புதிய டிவீட் பதியப்பட்டது. ஆனால் முந்தைய டுவீட்டின் பதிவு ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு அதைப்  பா ஜ க ஆதரவாளர்கள் ராகுலின் தவறு என்று சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று டுவிட்டரில் ராகுல் வெளியிட்ட செய்தியில்;- பா ஜ க தலைவர்கள் எனது தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, இனிமேலும் என் தவறை நீங்கள் சுட்டிக் காட்டினால் எனக்கு திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும். அனைவருக்கும் எனது அன்பை தெரிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Trending News