அமைதியை விரும்பும் அதே நேரத்தில் இறையாண்மையை காப்பதில் இந்தியா உறுதி: Rajnath Singh

கிழக்கு லடாக்கின் (Ladakh) நிலைமை குறித்து மாநிலங்களவையில் அறிக்கையை தாக்கல் செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath singh), கிழக்கு லடாக்கில் இந்தியா சவாலை எதிர்கொள்கிறது. பிரச்சினையை அமைதியாக தீர்க்க விரும்புகிறோம். ஆனால், அதே நேரத்தில் நமது ஆயுதப்படைகள் நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பத்தில் உறுதியாக நிற்கிறது என தெளிவுபடக் கூறினார்.

Last Updated : Sep 17, 2020, 03:55 PM IST
  • கிழக்கு லடாக்கில் பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரச்சினைக்கு அமைதியான தீர்வை விரும்பும் அதே நேரத்தில், நாட்டின் இறையாண்மையை காப்பத்தில் இந்தியா உறுதியாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
  • எல்லை கோடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் வெவ்வேறு நிலை உள்ளன.
  • 1950-60 களில் இரு நாடுகளும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
அமைதியை விரும்பும் அதே நேரத்தில் இறையாண்மையை காப்பதில் இந்தியா உறுதி: Rajnath Singh title=

கிழக்கு லடாக்கின் (Ladakh) நிலைமை குறித்து மாநிலங்களவையில் அறிக்கையை தாக்கல் செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath singh), கிழக்கு லடாக்கில் இந்தியா சவாலை எதிர்கொள்கிறது. பிரச்சினையை அமைதியாக தீர்க்க விரும்புகிறோம். ஆனால், அதே நேரத்தில் நமது ஆயுதப்படைகள் நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பத்தில் உறுதியாக நிற்கிறது என தெளிவுபடக் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath singh), தற்போது வரை இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில்  எல்லை பகுதி தொடர்பாக, இரு நாடுகளுக்கும் வெவ்வேறு வகை புரிதல்கள் உள்ளன என்றும்  கூறினார்.

ALSO READ | இந்திய வீரர்களை கண்டு அஞ்சி நடுங்கும் சீனாவின் ”சாக்லேட் வீரர்கள்”... காரணம் என்ன..!!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

"நாங்கள் பிரச்சினையை அமைதியாக தீர்க்க விரும்புகிறோம் என்பதையும், சீன தரப்பு எங்களுடன் இது தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் நான் தெளிவுபடுத்தியுள்ளேன்" என்று அவர் கூறினார். ஆனால் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான நமது ராணுவத்தின்  உறுதிப்பாட்டை யாரும் சந்தேகிக்கக்கூடாது எனவும் அவர் கூறினார். 

எல்லை கோடு தொடர்பாக  இரு நாடுகளுக்கும் வெவ்வேறு நிலை  உள்ளன என கூறிய ராஜ்நாத் சிங் 1950-60 களில் இரு நாடுகளும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. எல்லையில் ஏற்படும் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா முழுமையாக தயாராக உள்ளது என்று ராஜ்நாத் சிங் முன்னதாக நாடாளுமன்றத்தில் இருந்து சீனாவை எச்சரித்தார்.

பல காலமாக சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.  1963 ஆம் ஆண்டு சீன-பாகிஸ்தான் (China vs Pakistan) 'எல்லை ஒப்பந்தம்' என்று பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5,180 சதுர கி.மீ. பரப்பளவை, பாகிஸ்தான், சட்டவிரோதமாக  சீனாவிடம் (China) ஒப்படைத்தது என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ | கல்வான் தாக்குதல்: 60 சீன படையினர் கொல்லப்பட்டது அம்பலம்..!!!

Trending News