அகிலேஷ்&மாயாவதி காங்கிரஸ் உடன் கூட்டணியா?; நாளை அறிவிப்பு....

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மாயாவதியும் அகிலேசும் நாளை கூட்டாக அறிவிப்பு வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....

Last Updated : Jan 11, 2019, 12:13 PM IST
அகிலேஷ்&மாயாவதி காங்கிரஸ் உடன் கூட்டணியா?; நாளை அறிவிப்பு....  title=

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மாயாவதியும் அகிலேசும் நாளை கூட்டாக அறிவிப்பு வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி குறித்து நாளை முறைப்படி அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதிக் கட்சியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாஜக 71 தொகுதிகளில் வெற்றிபெற்றது. கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சில சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் சமாஜ்வாதிக் கட்சி வெற்றிபெற்றது.

இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இரு கட்சித் தலைவர்களும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

பா.ஜ.க.வை எதிர்த்து வலுவான அணியாக களமிறங்கும், இந்த இரு கட்சிகளும் 25 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி சேர்ந்துள்ளன. இதற்கு முன்பு சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனத் தலைவர் கன்ஷிராமும், பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி வைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் முலாயம் - கன்ஷிராம் கூட்டணி  அமோக வெற்றி பெற்றது. 

இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அணி சேருகின்றன. முன்னதாக, காங்கிரஸ் அணியில் இவ்விரு கட்சிகளும் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியை புறக்கணித்துவிட்டு அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. 

 

Trending News