இந்திய RAW நிறுவனம் தன்னை கொள்ள சதித்திட்டம்: இலங்கை அதிபர்...

இந்திய புலனாய்வு நிறுவனம் (RAW) என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தகவல்..! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 17, 2018, 10:33 AM IST
இந்திய RAW நிறுவனம் தன்னை கொள்ள சதித்திட்டம்: இலங்கை அதிபர்... title=

இந்திய புலனாய்வு நிறுவனம் (RAW) என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தகவல்..! 

இந்திய உளவு அமைப்பான RAW தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையின் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் சிறீசேன பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா, இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முயற்சி செய்து வருவதாக கூறினார். மேலும், இந்திய உளவு அமைப்பான RAW தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

ஆனால், இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் மோடிக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபரின் இத்தகைய பகிரங்கக் குற்றச்சாட்டு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஆனால் இந்த விஷயத்தை சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இலங்கையின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இலங்கை இது போன்ற பெரும் குற்றச்சாட்டை கூறியிருப்பது இதுவே முதன்முறை என்றும், இதனால் இருநாட்டு அரசியல் அரங்கில் குழப்பம் ஏற்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Trending News