மருத்துவ மேற்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு கிடையாது -உச்சநீதிமன்றம்!

மருத்துவ மேற்படிப்பில் 50% உள் இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Apr 24, 2018, 02:47 PM IST
மருத்துவ மேற்படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு கிடையாது -உச்சநீதிமன்றம்!  title=

தமிழக அரசின் கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ மேற்படிப்புக்கு 50% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தன. இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்த புதிய விதிமுறைகளின் 50% இட ஒதுக்கீடு ரத்து செய்துள்ளது. 

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு விதிகளின்படி இனி 50% இட ஒதுக்கீடு கிடையாது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் தான் பொருந்தும் என கூறி 50% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தெரிவித்திருந்தது.  

இந்த தீர்ப்பை எதிர்த்து மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் மேற்படிப்பில் சேர அளிக்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்.

இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், மருத்துவ மேற்படிப்பில் 50% உள் இடஒதுக்கீடு இல்லை என தெரிவித்தது. அதுமட்டும் இன்றி இந்தாண்டு மட்டும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Trending News