திங்கள் முதல் மஞ்சள் டாக்சிகளை இயக்க மேற்குவங்காள அரசு திட்டம்...

கொரோனா பீதிக்கு மத்தியில் மாநிலத்தில் மஞ்சள் டாக்சிகள் திங்கள்கிழமை முதல் நகர வீதிகளில் 30 சதவீத கட்டண உயர்வுடன் திரும்பி வர வாய்ப்புள்ளது என்று வங்காள டாக்ஸி சங்கத்தின் (BTA) செயலாளர் பிமல் குஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

Last Updated : May 15, 2020, 02:58 PM IST
திங்கள் முதல் மஞ்சள் டாக்சிகளை இயக்க மேற்குவங்காள அரசு திட்டம்... title=

கொரோனா பீதிக்கு மத்தியில் மாநிலத்தில் மஞ்சள் டாக்சிகள் திங்கள்கிழமை முதல் நகர வீதிகளில் 30 சதவீத கட்டண உயர்வுடன் திரும்பி வர வாய்ப்புள்ளது என்று வங்காள டாக்ஸி சங்கத்தின் (BTA) செயலாளர் பிமல் குஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

மேற்கு வங்காள போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரிகளுடன் வியாழக்கிழமை நடந்த சந்திப்பில், தற்போதைய விகிதத்தில் மீட்டர் அளவீடுகளுக்கு மேல் 30 சதவீத உயர்வை சங்கம் முன்மொழிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி, அதிகபட்சம் இரண்டு பயணிகள் மீட்டர் டாக்ஸிகளில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இருவரும், பின் இருக்கையில் அமர வேண்டியிருக்கும் என்றும் வங்காள டாக்ஸி சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

COVID-19 தொற்றுநோயால் நாடு தழுவிய பூட்டுதல் மூன்றாம் கட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் நகரத்தில் டாக்ஸி சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று குஹா கூறினார்.

எனினும் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் பூட்டப்பட்டதன் தொடக்கத்திலிருந்து, ஒரு சில டாக்சிகள் மட்டுமே அவசர காலங்களில் நகரத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News