ஒரே நாளில் 84 ஐஏஎஸ், 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Last Updated : Apr 27, 2017, 08:56 AM IST
ஒரே நாளில் 84 ஐஏஎஸ், 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் title=

உத்தரப்பிரதேசத்தில் 84 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 138 உயர் அதிகாரிகளை ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேச முதல் அமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவருகிறது அந்த மாநில அரசு நிர்வாகம். 

இந்நிலையில் தற்போது அம்மாநில முதல் அமைச்சராக யோகி ஆதித்யநாத் மற்றொரு அதிரடி உத்தரவு பிரபித்துளார், 84 ஐஏஎஸ் அதிகாரிகள், 54 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 138 உயர் அதிகாரிகளை ஒரே நாளில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது, நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த புதிதில், அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்றது. ஆனால், தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த இடமாற்ற நடவடிக்கை, அரசு நிர்வாகரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அந்தஸ்தில் உள்ளவர்கள். 

Trending News