IPL _2018: டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு

இன்று (மே-1) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் டாஸ் வென்றது மும்பை அணி 

Last Updated : May 1, 2018, 07:49 PM IST
IPL _2018: டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு title=

இன்று (மே-1) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது.


ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடக்கிறது. இதுவரை 30 ஆட்டங்கள் முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8-ல் 6 ஆட்டங்களில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் அதற்கடுத்த நிலையில் உள்ளன.

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே-1) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2-ல் வெற்றியையும் 5 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக வெற்றியை பெற முடியாமல் திணறி வருகிறது.

இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டிய நிலையில் பெங்களூர் அணி உள்ளது. எனவே இன்று நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றிக்காக போராடும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது போட்டி இது. முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது! 

Trending News