கத்துவா கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக கேரளாவில் போராட்டம்!!

கத்துவா மற்றும் உன்னோ பாலியல் பலாத்கார சம்பவங்களுக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள மலப்புரம் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

Last Updated : Apr 17, 2018, 08:18 AM IST
கத்துவா கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக கேரளாவில் போராட்டம்!! title=

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமிக்கு மயக்க மருத்து கொடுத்து அறையினுள் அடைத்து வைத்து 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.

இந்த,கொடூர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து, இந்த வழக்கில் வாதாடும் பெண் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டத்தையடுத்து, அவருக்கு உரிய பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

மேலும், ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்ட சிறுமி வழக்கை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சண்டிகருக்கு மாற்ற கோரிய சிறுமியின் தந்தை தொடுத்த வழக்கை ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இந்நிலையில், கத்துவா மற்றும் உன்னோ பாலியல் பலாத்கார சம்பவங்களுக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள மலப்புரம் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

Trending News