7th Pay Commission சூப்பர் செய்தி: மீண்டும் நல்ல செய்தி அளிக்க தயாராகும் மத்திய அரசு

X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களுக்கு ஏற்ப வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வகை பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, X பிரிவில் வரும் ஊழியர்களுக்கு இனி மாதம் ரூ.5400க்கு மேல் HRA கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2021, 02:25 PM IST
7th Pay Commission சூப்பர் செய்தி: மீண்டும் நல்ல செய்தி அளிக்க தயாராகும் மத்திய அரசு  title=

7th Pay Commission Latest Updates: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டில், அரசு ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் கிடைத்துள்ளன. முதலில் 11% அகவிலைப்படி அதிகரிப்புக்குப் பிறகு, ஊழியர்களுக்கு தீபாவளி போனசுடன் அகவிலைப்படி மற்றும் பயணப்படியிலும் அதிகரிப்பு கிடைத்தது.

இதனுடன், முந்தைய அகவிலைப்படி (Dearness Allowance) நிலுவைத் தொகையும் சேர்க்கப்படுகிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களின் மற்றொரு கொடுப்பனவு குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கின்றது. இதன் பயன் ஊழியர்களுக்கு ஜனவரி முதல் கிடைக்கக்கூடும்.

போர்டுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது

இந்த அதிகரிப்பு வீட்டு வாடகை கொடுப்பனவு அதாவது HRA இல் செய்யப்படும். இதன் காரணமாக சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். இது தொடர்பாக, 11.56 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அமல்படுத்துவதற்கான கோரிக்கை குறித்தும் நிதி அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. இந்த முன்மொழிவு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவின் ஒப்புதலுக்குப் பிறகு, ஊழியர்கள் ஜனவரி 2021 முதல் வீட்டு வாடகை கொடுப்பனவின் பலனைப் பெறுவார்கள். இந்த ஊழியர்களுக்கு HRA கிடைத்தவுடன் அவர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். இந்திய ரயில்வே டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் அசோசியேஷன் (IRTSA) மற்றும் நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ரயில்வே மேன் (NFIR) ஆகியவை ஜனவரி 1, 2021 முதல் எச்ஆர்ஏவை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

ALSO READ: 7th Pay Commission: நவம்பர் மாத சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு, கணக்கீடு இதோ 

ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு அதிகரிக்கத் தொடங்கியது

அகவிலைப்படி 25%க்கு மேல் இருந்தால் வீட்டு வாடகை கொடுப்பனவு தானாகவே திருத்தப்படும். DoPT இன் அறிவிப்பின்படி, மத்திய ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவில் அகவிலைப்படியின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட HRA வில் அரசாங்கம் இப்போது மற்ற மத்திய ஊழியர்களையும் சேர்க்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி, அனைத்து ஊழியர்களும் உயர்த்தப்பட்ட HRA பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர். இப்போது நகரத்தின் வகைப்படி, 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என ஊழியர்கள் எச்ஆர்ஏ பெறத் தொடங்கியுள்ளனர். இந்த அதிகரிப்பு 1 ஜூலை 2021 முதல் அகவிலைப்படியுடன் அமலுக்கு வந்துள்ளது.

நகர வாரியாக வீட்டு வாடகை கொடுப்பனவு கிடைக்கிறது

X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களுக்கு ஏற்ப வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வகை பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, X பிரிவில் வரும் ஊழியர்களுக்கு இனி மாதம் ரூ.5400க்கு மேல் HRA கிடைக்கும். இதற்குப் பிறகு, Y வகுப்பைச் சேர்ந்தவர்கள் மாதம் 3600 ரூபாயையும், பிறகு Z வகுப்பைச் சேர்ந்தவர்கள் 1800 ரூபாயையும் பெறுவார்கள்.

50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் வருகின்றன. இந்த நகரங்களில் உள்ள மத்திய பணியாளர்களுக்கு (Central Government Employees) 27% HRA கிடைக்கும். இது Y வகை நகரங்களில் 18 சதவீதமாகவும், Z பிரிவில் 9 சதவீதமாகவும் இருக்கும்.

ALSO READ: 7th Pay Commission: புத்தாண்டில் அடிப்படை ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு, விரைவில் அறிவிப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News