சர்வதேச மகளிர் தினம்: ‘உலகின் சிறந்த தாய்’ விருதை பெற்ற முதல் ஆண்..!

''டவுன் சிண்ட்ரோம்'' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் புனே-வை சேர்ந்த ஆணுக்கு, ''உலகின் சிறந்த தாய்'' என்ற விருது!!

Last Updated : Mar 8, 2020, 07:03 PM IST
சர்வதேச மகளிர் தினம்: ‘உலகின் சிறந்த தாய்’ விருதை பெற்ற முதல் ஆண்..! title=

''டவுன் சிண்ட்ரோம்'' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் புனே-வை சேர்ந்த ஆணுக்கு, ''உலகின் சிறந்த தாய்'' என்ற விருது!!

"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே"......

தனது வம்சத்தை நீடிக்கச் செய்யும் வாரிசை அள்ளி அரவணைத்து, சீராட்டி பாராட்டி வளர்க்கும் ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளின் முதல் நண்பனாகின்றார். தந்தையின் வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம். இந்த உலகில் ஒவ்வொரு பிள்ளையின் மிகச்சிறந்த முதல் நண்பன் யாரென்றால் அது அவரது தந்தை தான்… இவ்வளவு ஏன்! குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் முதல் கதாநாயகனே அவரது தந்தை தான் என்று கூறினால் அது மிகையாகாது.... ஏனென்றால் அப்பா …..என்ற சொல்லில் அத்தனை அர்த்தங்கள் ஒளிந்திருக்கின்றது!. அந்த வகையில், ''டவுன் சிண்ட்ரோம்'' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் புனே-வை சேர்ந்த ஆணுக்கு, ''உலகின் சிறந்த தாய்'' என்ற விருது கிடைத்துள்ளது. 

உலகம் முளுவதும் சர்வதேச மகளிர் தினம் 2020 மார்ச் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படும். இந்த நாளில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவர்கள் செய்த சாதனைகளுக்காக கோரவிக்கப்படுவார்கள். சர்வதேச மகளிர் தினத்தை குறிக்கும் நிகழ்வான பெங்களூரின் வெம்பவரில், புனேவில் வசிக்கும் ஆதித்யா திவாரி "உலகின் சிறந்த அம்மா" என்று கௌரவிக்கப்பதிட்டுள்ளார். 

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் ஆதித்ய திவாரி. மென்பொருள் பொறியாளரான இவர், கடந்த 2016-ல் டவுன் சிண்ட்ரோம் நோய் பாதித்த குழந்தையை தத்தெடுத்தார். குழந்தையை வளர்ப்பதற்காக தனது வேலையை ராஜினாமாவும் செய்துள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும், 22 மாநிலங்களில் டவுன் சிண்ட்ரோம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாய் ஸ்தானத்தில் அவர் செய்யும் சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நடந்த 'வெம்பவர்' நிகழ்ச்சியில், ஆதித்ய திவாரிக்கு '' உலகின் சிறந்த தாய்'' விருது வழங்கப்பட உள்ளது. இது குறித்து ஆதித்ய திவாரி கூறுகையில்... உலகின் சிறந்த தாய் விருது பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் சிறந்த மனிதனாகவும், குழந்தைக்கு சிறந்த பெற்றோராகவும் இருக்க விரும்புகிறேன். அவ்வாறு, எப்படி இருக்க வேண்டும் என, எனது மகன் எனக்கு கற்று கொடுத்துள்ளான். மேலும், 1.5 வருட சட்டப்போராட்டத்திற்கு பிறகு தான் குழந்தை எனது வசம் வந்தது. இவன் என்னிடம் வந்தது முதல் எங்களது பயணம் இனிமையானதாக உள்ளது. எனக்கு கடவுள் கொடுத்த சிறந்த பரிசு இவன். பெற்றோர் தன்மை என்பது பாலினத்தை பொறுத்தது அல்ல" என அவர் தெரிவித்துள்ளார்.  

 

Trending News