திருமண உறவை சீரழிக்கும் இந்த 3 விஷயங்கள்... பெண்கள் செய்யும் பெரிய தவறுகள்!

Relationship Tips: மனைவி இந்த மூன்று விஷயங்களை செய்யும் போது, கணவனுக்கு அதிக வெறுப்பு உண்டாகி உங்களின் திருமண உறவே சீரழிந்து விடும் வாய்ப்புள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 7, 2024, 02:24 PM IST
  • திருமண வாழ்வில் செய்யும் தவறுகளே சிக்கலுக்கு வழிவகுக்கின்றன.
  • சிக்கலை தீர்ப்பதே நல்லது, சமாளிப்பது அல்ல.
  • சண்டையில் கூட இந்த விஷயங்களை மனைவி பேசுவது சரியாகாது.
திருமண உறவை சீரழிக்கும் இந்த 3 விஷயங்கள்... பெண்கள் செய்யும் பெரிய தவறுகள்! title=

Relationship Tips In Tamil: திருமண உறவு என்பது உங்களின் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் என்பார்கள். ஏனென்றில் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தால் அடுத்த இன்னிங்ஸில் பந்துவீச வேண்டுமோ அதேபோல் தான் திருமணத்திற்கு முன்பிருந்த வாழ்க்கை என்பது திருமணத்திற்கும் பிறகு இருக்கவே இருக்காது எனலாம். 

இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். நீங்கள் காதலித்தே திருமணம் செய்திருந்தாலும் கூட இதுதான் நிலைமை காரணம். ஏனெனில் உங்களின் தனிப்பட்ட வாழ்விலும், சுற்றத்திலும் மற்றொரு நபரான உங்களின் பார்ட்னரை அனுமதித்துள்ளீர்கள் அல்லவா... உங்களின் வாழ்க்கையில் மாற்றம் இருக்கிறது என்றால் அது எதிர்மறையாகதான் இருக்க வேண்டும் என்றில்லை, நேர்மறையாகவும் கூட இருக்கலாம். 

அனைவருமே திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்றே நினைப்பார்கள். இருப்பினும் உறவில் ஒருநபர் அல்லது இருவரும் செய்யும் தவறுகளால் சிக்கல்கள் அதிகரிக்கும். இவைதான் திருமண உறவில் சிறு சிறு சண்டைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் ஆண்கள் மட்டும்தான் தவறு செய்திருக்க வேண்டும் என்றில்லை பெண்களும் கூட திருமண உறவு சிக்கலாக மாறுவதற்கும், உறவு முறிவதற்கும் காணமாக அமைவார்கள். அந்த வகையில், மனைவியாக இந்த மூன்று விஷயங்களை நீங்கள் செய்யும் போது, கணவனுக்கு உங்கள் மீது வெறுப்பு உண்டாகி திருமண உறவே சீரழிந்து விடும். அந்த மூன்று விஷயங்களை விரிவாக இங்கு காணலாம்.

மேலும் படிக்க |  லவ்வர் எமோஷனல் பிளாக் மெயில் செய்கிறாரா? உங்களுக்கான 5 எச்சரிக்கை அறிகுறிகள்

அதிகம் எதிர்பார்க்கக் கூடாது

அதாவது உங்கள் பார்ட்னரிடம் இருந்து காதலை, அன்பை, பாசத்தை அதிகம் எதிர்பார்க்கலாம். ஆனால் மற்ற விஷயங்களில் அப்படி செய்வது நல்லது கிடையாது. அதாவது உங்கள் கணவனிடம் இருந்து அதை வாங்கிக்கொடு, இதை வாங்கிக்கொடு என அடிக்கடி நச்சரிக்கும் வகையில் நடந்துகொள்ளும்போது உங்களின் கணவனுக்கு வெறுப்பு உண்டாக அதிக வாய்ப்புள்ளது. இது உங்களின் உறவில் கசப்புணர்வை வளர்க்கும். உங்கள் கணவனால் என்ன முடியுமோ அதை எதிர்பார்ப்பதில் தவறில்லை, எல்லை தாண்டி அவருக்கு அழுத்தம் கொடுப்பது என்பது சரியாகாது அல்லவா...

மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்...

உங்களின் குடும்பத்தில் ஒருவருடனோ அல்லது நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்த ஒருவருடனோ கணவனை ஒப்பிட்டு பேசவே பேசாதீர்கள். பெரும்பாலான கணவன்களுக்கு இது மிகுந்த காயத்தை ஏற்படுத்திவிடலாம். அதன்பின் சொன்ன சொல்லை திரும்ப பெற முடியாதல்லவா, எனவே இதுபோன்ற செயல்களை செய்யவே செய்யாதீர்கள். ஏனெனில் மனைவிதான் உலகம் என ஒருவர் வாழ்ந்து வருகிறார் எனில் அவரை நோக்கி அவரின் மனைவியே இப்படி ஒன்றை பேசும்போது அவரின் அஸ்திவாரமே ஆடிப்போகும். உங்கள் கணவனுக்கு எதையாவது நீங்கள் சொல்ல வேண்டும் என்றால் அவர் மனதை காயப்படுத்தாதவாறு பேசலாம். நிச்சயம் ஒரு மனிதரை போன்ற இன்னொருவரால் இருக்கவே முடியாது, அப்படி இருந்தே ஆக வேண்டும் என எதிர்பார்ப்பதும் ஒருவகையில் வன்முறையாக அமைந்துவிடும்.

அனைத்திற்கும் சந்தேகப்படுவது

நம்பிக்கைதான் ஒரு திருமண உறவின் ஆணிவேர் எனலாம். அதன்மீது உங்களின் ஒட்டுமொத்த வாழ்வுமே கட்டியெழுப்பப்பட இருக்கிறது. அப்படியிருக்கும் போது, கட்டடம் முழுமையாடாத போதோ அல்லது முழுமையடையும்போது அஸ்திவாரம் ஆட்டம்கண்டால் என்னவாகும், மொத்தமும் முடிந்துவிடும் அல்லவா... அதேதான் இங்கும். அவரை அடிக்கடி சந்தேகப்பட்டு அவரின் மொபலை நோண்டுவது, சந்தேகத்துடன் கேள்வி கேட்பது ஆகியவை தொடர்ச்சியாக இருக்கும்பட்சத்தில் உங்கள் உறவின் ஆணிவேர் பிடுங்கப்பட்டு மொத்தமாக சரிந்து கீழே விழுந்துவிடும். சந்தேகப் புத்தி என்பது விஷமாகும். அது உறவையே கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தது என்பதை மறக்க வேண்டாம். இந்த மூன்று விஷயங்கள் மனைவிகளுக்கு மட்டுமின்றி கணவன்களுக்கும் பொருந்தும்.

(பொறுப்பு துறப்பு: திருமண உறவு குறித்த இந்த கட்டுரை பொது தகவலை அடிப்படையாக எழுதப்பட்டது. உங்களுக்கு இதுதொடர்பாக பிரச்னை வந்தால் அதற்கான நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | பெண்களின் இடுப்பு அழகுக்கு தடையாக இருக்கும் அடிவயிறு தொப்பையை குறைக்க சிம்பிள் டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News