இந்திய ராணுவத்தில் பம்பர் ஆட்சேர்ப்பு, மாதம் 63,200 சம்பளம்

Indian Army Recruitment 2022: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 18000 முதல் 63200 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் தேதி போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 4, 2022, 09:52 AM IST
  • மொத்தம் 3068 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ 18000 முதல் ரூ 63200 வரை சம்பளம்
  • எத்தனை பதவிகள் வழங்கப்படும்?
இந்திய ராணுவத்தில் பம்பர் ஆட்சேர்ப்பு, மாதம் 63,200 சம்பளம் title=

இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு 2022: மத்திய ஆட்சேர்ப்பு பிரிவு, ராணுவ ஆயுதப் படை மையம் பல்வேறு பதவிகளில் பம்பர் வேலை வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. டிரேட்ஸ்மேன் மேட், ஃபயர்மேன் மற்றும் இளநிலை அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு மொத்தம் 3068 பணியிடங்கள் நிரப்பப்படும். இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டிரேட்ஸ்மேன் மேட் - 2313 பணியிடங்கள், தீயணைப்பு வீரர் - 656 மற்றும் ஜூனியர் அலுவலக உதவியாளர் 99 பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 18000 முதல் 63200 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் தேதி போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் . அந்தவகையில் ஏஓசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aocrecruitment.gov.in இல் “சமீபத்திய செய்திகள்” பிரிவின் கீழ் சமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்க்க விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்

யாருக்கு எத்தனை பதவிகள்?
இதுவரை கிடைத்த தகவலின்படி, பல்வேறு பிரிவுகளில் டிரேட்ஸ்மேன் பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் நிரப்பப்படும். பொதுப் பிரிவினருக்கு 938 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் பிரிவினருக்கு 231 இடங்களும் , பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினருக்கு 624 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 347 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 173 இடங்களும் உள்ளன. இதன் மூலம் மொத்தம் 2313 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தீயணைப்பு வீரர் பணியிடங்களைப் பற்றி பேசுகையில், பொதுப் பிரிவினருக்கு 236 பணியிடங்களும், ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு 66 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 177 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 98 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 49 இடங்களும் உள்ளன. இதன் மூலம் மொத்தம் 656 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

அதேபோல் ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டென்ட் பணியிடங்களைப் பற்றி பேசுகையில், பொதுப் பிரிவினருக்கு 40 இடங்களும், ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு 10 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 27 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 15 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 7 இடங்களும் உள்ளன. இதன் மூலம் மொத்தம் 99 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

சம்பள விவரம்:
டிரேட்ஸ்மேன் மாதம் ரூ.18000 முதல் ரூ.56900, ஃபயர்மேன் ரூ.19900 முதல் ரூ.63200. மேலும் இளநிலை அலுவலக உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.19900 முதல் ரூ.63200 சம்பளம் வழங்கப்படும்.

மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News