பண்டிகைகள் எதிர்வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

அடுத்த சில வாரங்களில் பண்டிகைகள் வரிசை கட்டி வரவுள்ள நிலையில், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சில பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளது!

Last Updated : Sep 15, 2019, 12:33 PM IST
பண்டிகைகள் எதிர்வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! title=

அடுத்த சில வாரங்களில் பண்டிகைகள் வரிசை கட்டி வரவுள்ள நிலையில், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சில பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளது!

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் அரசாங்கம், தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க முடிவுசெய்துள்ளது. இந்த சம்பள உயர்வு சந்தையில் கூடுதல் தேவையையும் உருவாக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

நெடு நாட்களாக குறைந்தப்பட்ச ஊதிய உயர்வை ஊழியர்கள் கோரி வருகின்றனர். அதாவது, அடிப்படை ஊதியத்தை ரூ .18 ஆயிரத்திலிருந்து ரூ .26 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். சில மாநில அரசுகளும் இதைத் தாங்களே செய்துள்ளன.

ஷாஹ்ரா மற்றும் தீபாவளியைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் பணியாளர்களின் அன்பளிப்பு கொடுப்பனவை (DA) அதிகரித்துள்ளன. ஏழாவது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் DA அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் மத்தியில், இமாச்சல பிரதேச அரசு மாநில அரசு ஊழியர்களின் DA-வை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இமாச்சல அரசு இதை நான்கு சதவீதம் அதிகரித்து வருகிறது, இது 2019 அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். புதிய ஊதிய உயர்வுக்கு பிறகு, அவர்களுக்கு 148 சதவிகிதம் DA கிடைக்கும். ஹரியானா மாநில மின்சார வாரியமும் தனது ஊழியர்களின் DA-வில் நான்கு சதவீதம் அதிகரிப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளையில் ஜனவரி முதல் ஜூலை வரை நிலுவைத் தொகையை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் இதற்கு முன்னர் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News