Watch: கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாய் மாறிய கணவன்..!

சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக தானே நாற்காலியாக மாறிய கணவனின் செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது!!

Last Updated : Dec 9, 2019, 12:14 PM IST
Watch: கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாய் மாறிய கணவன்..! title=

சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக தானே நாற்காலியாக மாறிய கணவனின் செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது!!

ந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக தானே நாற்காலியாக மாறிய கணவனின் செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது. 

கணவன் - மனைவி மற்றும் குடும்ப உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் நாடு தான் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. ஆனால் நம் அண்டை நாடான சீனாவிலும் கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்துள்ள ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹெகாங் என்ற நகரத்தில், ஒரு தம்பதி மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வந்துள்ளனர் தம்பதியர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழுந்து இடம்தர யாரும் முன் வரவில்லை. தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த அவரது கணவர், உடனே தரையில் மண்டியிட்டுத் தன்னை ஒரு நாற்காலி போல் ஆக்கி தன் முதுகில் மனைவியை அமர வைத்துக் கொண்டார். இதன் சிசிடிவி பதிவு வெளியாக, சமூக வலைதளங்களில் வைரலானது. 

 

Trending News