கடும் வெயில் காரணமாக ஜூன் 24 வரை விடுமுறை நீடிப்பு!!

ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 24 ஆம் தேதி வரை நீட்டிப்பு!!

Last Updated : Jun 21, 2018, 08:00 PM IST
கடும் வெயில் காரணமாக ஜூன் 24 வரை விடுமுறை நீடிப்பு!!  title=

ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 24 ஆம் தேதி வரை நீட்டிப்பு!!

பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வந்தாலும், பல இடங்களில் இன்னும் வெயில் வாட்டி வதைத்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் என்றாலே தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலர் உயிரிழந்து வருகின்றனர். 

தமிழகம் மற்றும் ஆந்திராவில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்தாலும் குறிப்பாக ஆந்திராவில் மற்ற மாநிலத்தை விட வெயில் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை நாட்களை நீடித்துள்ளது.  

ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 24 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 

 

Trending News