இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்

பழங்கால ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கும், அல்லது உங்கள் வீட்டில் தாத்தா பாட்டிகள் இருந்தால், அவர்களிடம் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் இருக்கும். பழைய அரிதான நோட்டுகள் நாணயங்கள் உங்கள் வீட்டில் இருந்தால்,  இந்த செய்தி உங்களுக்கு தான்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 11, 2021, 10:39 AM IST
  • இந்த கொரோனா காலத்தில் அதிகம் கஷ்டப்படாமல் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க ஒரு எளிய வழி.
  • பழங்கால ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கும்
  • பழைய அரிய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் உள்ள நபர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு தான்.
இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம் title=

பழங்கால ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கும், அல்லது உங்கள் வீட்டில் தாத்தா பாட்டிகள் இருந்தால், அவர்களிடம் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் இருக்கும். பழைய அரிதான நோட்டுகள் நாணயங்கள் உங்கள் வீட்டில் இருந்தால்,  இந்த செய்தி உங்களுக்கு தான்.

இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து கொண்டே லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க ஒரு எளிய வழி உள்ளது. புத்திசாலித்தனத்துடன், அதிர்ஷ்டமும் சேர்ந்தால், நொடியில் பணக்காரர்களாக ஆகலாம். உதாரணமாக, உங்களிடம்  இந்த குறிப்பிட்ட “2” ரூபாய் காயின் இருந்தால், அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் பல நாணயங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது, இதன் விளைவாக அரிதாக கிடைக்கும் நாணயங்களின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்து விட்டது. எப்போதுமே அரிதான பழைய நாணயங்கள் ரூபாய் நோட்டுகளுக்கு நல்ல மதிப்பு உண்டு. சில அரிய ரூபாய் நோட்டுகள் அல்லது அரிய நாணயங்கள் உங்களுக்கு இந்த கொரோனா காலத்தில், சிறந்த வரப்பிரசாதமாக மாறலாம்.

அதிர்ஷ்டம் தரும் “2” ரூபாய் நாணயம் (Old coin of Rs. 2)

இதற்குள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால், நாணயம் 1994, 1995, 1997 மற்றும் 2000 ஆண்டுகளில் அச்சடிக்கபப்ட்ட நாணயங்களாக இருக்க வேண்டும். உங்களிடம் இந்த நாணயம் இருந்தால், நீங்கள் ரூ .5 லட்சம் சம்பாதிக்கலாம்.

ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

இந்த அரிய நாணயங்களில் ஒன்று உங்களிடம் இருந்தால், Quickr தளத்தில் அதனை விற்க, முதலில்  ஆன்லைன் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். நாணயத்தின் புகைப்படத்தைக் கிளிக் செய்து தளத்தில் பதிவேற்றவும். இதற்குப் பிறகு, உங்கள் முகவரி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும். வலைத்தளம் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்த்து பதிவு செய்யும்.

உங்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசினால், வாங்குபவர் உங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வார். அந்த வலைதளத்தின், கட்டணம் மற்றும் விற்பனை விதிமுறைகளின்படி உங்கள் நாணயத்தை விற்கலாம்.

இந்தியாவில் 2 ரூபாய் நாணயம் 1982 ஆம் ஆண்டில்  அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய ரூ .2 நாணயம் குப்ரோ-நிக்கல் உலோகத்தால் அச்சிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ | அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் இந்த “5” ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News