இந்தியாவின் அதிவேக ரயிலைப் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 30, 2022, 12:21 PM IST
  • இந்தியாவின் அதிவேக ரயில்
  • இதுவரை அறிந்திராத 10 விஷயங்கள்
இந்தியாவின் அதிவேக ரயிலைப் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள் title=

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத் தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ’மேக் இன் இந்தியா' பிரச்சாரத்தின் கீழ் உருவாக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் வகையில் மொத்தம் இது போன்ற மொத்தம் 75 ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதிவேக ரயிலான வந்தே பாரத், மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். மேலும் இது 52 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும்.

வந்தே பாரத் ரயிலைப் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்;

1. புதிய வந்தே பாரத் ரயில்கள் முதல் இரண்டு வந்தே பாரத் ரயில்களை விட கூடுதல் வசதியை கொண்டது. 

2. ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், தப்பித்துக் கொள்ளும் வகையில் நான்கு அவசர ஜன்னல்கள் உள்ளன.

3. புதிய வந்தே பாரத் ரயில்களில் ரயில் மோதலைத் தவிர்க்க உள்நாட்டு தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு இருக்கும்.

4. புதிய வந்தே பாரத் ரயில்களில் சிறந்த வெப்ப காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாட்டு அமைப்பும் இருக்கும்.

5. பயணிகள் தகவல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முந்தைய ரயில்களில் காணப்பட்ட 24 இன்ச் டிஸ்ப்ளேவுக்குப் பதிலாக 32 இன்ச் டிஸ்ப்ளேவில் கொண்டிருக்கும்.

மேலும் படிக்க | ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவின் இந்த விதியை கட்டியம் தெரிஞ்சிக்கோங்க

6. இந்த ரயிலில் ஏர் கண்டிஷனிங், தகவல் தொடர்பு மற்றும் GSM/GPRS மூலம் கட்டுப்பாட்டு மையம்/பராமரிப்பு ஊழியர்களுக்கு கருத்து தெரிவிக்க மேம்படுத்தப்பட்ட கோச் கட்டுப்பாட்டு மேலாண்மை அமைப்பு இருக்கும்.

7. புதிய ரயிலில் நான்கு பிளாட்ஃபார்ம் பக்க கேமராக்கள் இருக்கும். அவற்றில் இரண்டு கோச்சின் உள்ளே இருக்கும்.பின்புற கேமராக்களும் உள்ளன. 

8. ஓட்டுநர்-பாதுகாவலர் தொடர்பாடலில் குரல் பதிவு வசதியும் கிடைக்கும்.

9. ரயில் பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், ரயிலில் நான்கு அவசர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

10. தீ பாதுகாப்பு அளவை மேம்படுத்த அனைத்து பெட்டிகளிலும் ஏரோசல் தீயை அடக்கும் அமைப்பு இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பயணிகளின் கவனத்திற்கு! ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ்அப்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News