வெற்றியை அள்ளித் தரும் திங்கட்கிழமை பரிகாரங்கள்..!!

சிவபெருமானின் அருளைப் பெற திங்கட்கிழமை விரதம் மேற்கொள்வதை தவிர, வேறு சில பரிகாரங்களும் வாழ்க்கையில் வெற்றியை தேடித் தரும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2021, 07:18 AM IST
வெற்றியை அள்ளித் தரும் திங்கட்கிழமை பரிகாரங்கள்..!! title=

புதுடெல்லி: திங்கட்கிழமை சிவன் வழிபாட்டுக்கு விசேஷமான நாள். இந்த நாள் சிவ பெருமானுக்கு  மிகவும் உகந்த நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. சிவனின் அருளைப் பெறுவதற்காக பலரும் திங்கட்கிழமை விரதம் கடைப்பிடிக்கின்றனர். சிவனின் அருளைப் பெற, திங்கட்கிழமைகளில் செய்யும் சில பர்காரங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றியை தேடித் தரும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவதோடு, அகால மரண அபாயத்தையும் தவிர்க்கும்  சில சிறப்பு பரிகார நடவடிக்கைகள் மற்று, சிறப்பு பூஜைகள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

திங்கட்கிழமை நந்தி காளைக்கு பச்சைப் புல் கொடுப்பது மிகவும் நல்லது. இது மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கிறது. இத்துடன் பணம் தொடர்பான பிரச்சனையும் நீங்கும்.

திங்கட்கிழமை அன்று மஹாமிருத்யுஞ்சய மந்திரத்தை 1008 முறை ஜபிக்கலாம். மேலும், சிவனுக்கு ருத்ராபிஷேகமும் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சிவபெருமானின் அருள் கிடைக்கப் பெறுவதால் அகால மரணம் தவிர்க்கப்படுகிறது.

ALSO READ | Numerology: 2022 ஆம் ஆண்டில் இந்த எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

திங்கட்கிழமையன்று சிவனுக்கு எள் மற்றும் பேரிச்சம்பழம் படைக்கவும். இது பாவங்களிலிருந்து உங்களை விடுவிக்கிறது. அதனுடன் மகிழ்ச்சியும் கூடுகிறது.

குழந்தை செல்வத்தை பெற, திங்கட்கிழமை, கோதுமாவினால் 11 சிவலிங்கம் உருவாக்கவும். அதன் பிறகு அதனை 11 முறை அபிஷேகம் செய்யவும்.

திங்கட்கிழமை, வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் செல்வமும் வளமும் பெருகும்.

திங்கட்கிழமை ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள். இப்படி செய்வதால் அன்னபூரணி எப்போதும் வீட்டில் வாசம் செய்கிறாள். மேலும் உணவுக்கு பஞ்சம் என்பதே ஏற்படாது.

நீண்ட காலமாக நிறைவேறாத விருப்பங்களை நிறைவேற்ற, திங்கட்கிழமை  அன்று, 21 வில்வ இலைகள் மீது ஓம் நம சிவாய என்று எழுதுங்கள். அதன் பிறகு சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யுங்கள்.

குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், திங்கட்கிழமை அன்று பஞ்சாமிர்தத்தால் சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சிவன் அருளால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

வறுமை நீங்க, திங்கட்கிழமையன்று ஏதேனும் சிவன் கோவிலில் 'தரித்ராதஹன் ஸ்தோத்திரம்' பாராயணம் செய்யுங்கள். அதன் பிறகு, கரும்பு சாறினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News