Lucky Man: லாட்டரியில் இரண்டாவது முறையாக $20 லட்சம் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி

அதிர்ஷ்டம் ஒருவரின் வீட்டுக் கதவை மட்டும் தான் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்குமா? லாட்டரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கான பரிசுத்தொகை பெற்றவருக்கும் மீண்டும் அதே அதிர்ஷ்டம் கிடைத்தால்?!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 31, 2021, 03:51 PM IST
  • அதிர்ஷ்டம் என்றால் இதுதான்!
  • பேரதிர்ஷ்டம் பெற்றவருக்கு இரண்டாவது முறையும் பல கோடி ரூபாய் லக்கி பிரைஸ்
  • மகிழ்ச்சிகாக விளையாடினால் அதிர்ஷடம் வரும்!!!
Lucky Man: லாட்டரியில் இரண்டாவது முறையாக $20 லட்சம் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி title=

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்ற செலவாடை (பழமொழி அல்லது சொல்வழக்கு) உண்டு. அது உண்மை என்று சொல்கிறது இந்த சம்பவம். லாட்டரி சீட்டில் ஒரு முறை அதிர்ஷ்டம் அடித்தாலே பெரிய விஷய்ம். ஆனால், இரண்டாவது முறையாக லாட்டரி சீட்டில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தவருக்கு இந்த பழமொழி உண்மையானது தானே?

பல ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரியில் மில்லியன் கணக்கில் டாலர்களை பரிசாக வென்ற ஒருவருக்கு தற்போதும் லாட்டரியில் $2 மில்லியன் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
 
அமெரிக்காவின் சாலிஸ்பரியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவர், உள்ளூர் எரிவாயு நிலையத்திலிருந்து இரண்டு ‘$2,000,000 Richer’  ஸ்க்ராட்ச் டிக்கெட்டுகளை வாங்கினார். அவருக்கு அதில் அதிர்ஷ்டசாலியாக பரிசை வென்றார் என மேரிலாண்ட் லாட்டரி மற்றும் கேமிங் கன்ட்ரோல் ஏஜென்சி (Maryland Lottery and Gaming Control Agency) தெரிவித்துள்ளது.

முதல் டிக்கெட்டில், $ 100 கிடைத்தது. இரண்டாவது டிக்கெட்டில் $2 மில்லியன் ஜாக்பாட்டை வென்றார் அந்த நபர்.

பணியில் இருந்து ஓய்வுபெற்ற தொழிலாளியான நபருக்கு கொரோனா தொற்று காலத்தில் தான் இந்த பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. ஆனால் உடனடியாக பரிசுத் தொகைக்கான கோரிக்கையை வைக்காமல் காத்திருந்தார்.அவரது பரிசைப் பெற கடைசி தேதி வரை காத்திருந்த அவர், இறுதி நாளன்று பரிசுத்தொகைக்கான கோரிக்கையை முன்வைத்ததாக மேரிலேண்ட் லாட்டரி அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read Also | பாம்பா? பழுதா? பல் துலக்கும் பிரஷ்ஷா? சீறுவதெல்லாம் பாம்பல்ல

"நான் சற்று பதட்டமாக இருந்தேன்," என்று லாட்டரி பரிசு வென்றவர், மேரிலாந்து லாட்டரி அதிகாரிகளிடம் கூறினார். "வீட்டில் பாதுகாப்பாக டிக்கெட்டை வைத்திருந்தாலும், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்றும் கவலைப்பட்டேன், அதே போல, டிக்கெட் திடீரென காலாவதி ஆனதாக அறிவிக்கப்பட்டுவிடுமோ என்றும் பயந்தேன்” என்றும் அவர் கூறினார்.

ஆனால், தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை ஒப்புக்கொண்ட 65 வயது முதியவர், "மகிழ்ச்சிக்காக விளையாடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். “யதார்த்தமாக இருங்கள் மற்றும் விளையாடும் போது நீங்கள் பெரிய ஜாக்பாட்டிற்காக விளையாடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்பத்திற்காக விளையாடுங்கள், நீங்கள் செய்வதை ரசிக்கும் வரை, வெற்றி அல்லது தோல்வி எதுவும் உங்களைப் பாதிக்காது. வெற்றி கிடைத்தால், அது கூடுதல் மகிழ்ச்சி தான், நீங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருக்கிறீர்கள்," என்று அவர் கூறினார்.

‘$2,000,000 ரிச்சர்’ கேம், பிப்ரவரி 25, 2019 அன்று தொடங்கப்பட்டது, நவம்பர் 1, 2021 அன்று முடிவடைகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு $30 முதல் $50,000 வரை பரிசுகளையும், $2 மில்லியன் மதிப்புள்ள ஆறு சிறந்த பரிசுகளையும் வெல்லும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டது.  

Also Read | போஸ் கொடுத்த பாம்பு, கிஸ் கொடுத்த நபர், வைரலான வீடியோ!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News