வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனு என்ற வெள்ளை நிற பெண் புலியை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார்.

Last Updated : Oct 10, 2018, 11:25 AM IST
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்! title=

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனு என்ற வெள்ளை நிற பெண் புலியை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார்.

இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 1952-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி முடிய வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா மக்களுக்கு வன உயரினங்களை பாதுகாத்தல் மற்றும் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். 

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புலி மற்றும் சிங்கத்தின் உணவுக்காக நாளொன்றுக்கு ரூ.1196.68 செலவாகும், இதே போன்று இதர விலங்குகளுக்கு அதன் உணவிற்கேற்ப நாளொன்றிற்கான செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்ற பெண் வெள்ளைப் புலியை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார். 

என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News