இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பயணங்கள் சாத்தியமாகும்

ராசிபலன் மார்ச் 29 2022: மகர ராசிக்காரர்களுக்கு, எந்த ஒரு சிறப்பு வேலையும் வெற்றியைத் தரும். விருச்சிக ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களிடையே அமைதியின்மையால் கவலைப்படுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 29, 2022, 06:20 AM IST
  • கன்னி ராசியினருக்கு லாபகரமான பயணங்கள் சாத்தியமாகும்
  • ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிலையற்ற தன்மை ஏற்படலாம்
  • கும்ப ராசிக்காரர்கள் மதிக்கப்படுவார்கள்
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பயணங்கள் சாத்தியமாகும் title=

ராசிபலன் மார்ச் 29 2022: இன்று உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை ஆஸ்ட்ரோ குரு பெஜன் தருவாலாவின் மகன் சிராக் தருவாலாவிடம் இருந்து தெரிந்துக்கொள்ளுங்கள். இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். மறுபுறம், துலாம் ராசிக்காரர்கள் தங்கள் முயற்சிகளில் முழு வெற்றியைப் பெறுவார்கள்.

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கூட்டாளிகளின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். தவறிய சில வாய்ப்புகள் மற்றும் கடந்த கால நினைவுகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மிதுனம்: கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தோற்றப்பொலிவுகளில் மாற்றங்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கான பலன்கள் கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

கடகம்: பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்நிலை கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், ஆதாயமும் கிடைக்கும்.

கன்னி: எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மனதில் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். 

துலாம்: கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வகையில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொருள் வரவுகள் மேம்படும். மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்: இனிமையான பேச்சுக்களின் மூலம் மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில செயல்பாடுகள் காலதாமதமாக நிறைவு பெறும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.

தனுசு: குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதில் நிதானம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். விதண்டாவாத சிந்தனைகளை விடுத்து விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி உண்டாகும்.

மகரம்: எதிர்பார்த்த பணிகள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

கும்பம்: கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மற்றும் உதவிகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

மீனம்: உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நிர்வாக பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News