உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதிவரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது..!

Last Updated : Aug 1, 2020, 04:54 PM IST
உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! title=

ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதிவரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது..!

மக்கள் முன்பை விட இந்த ஆண்டு தங்கள் உடல்நிலை குறித்து விழிப்புடன் உள்ளனர். COVID-19 தொற்றுநோயை அடுத்து, எல்லோரும் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறார்கள் மற்றும் நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறார்கள். மழைக்காலம் என்பது மக்கள் இன்னும் கவனமாக இருக்கும் காலமாகும். ஏனெனில், இது கொசுக்களால் பரவும், வான்வழி, நீரினால் பரவும் நோய்கள் மற்றும் அசுத்தமான உணவு காரணமாக பரவும் நோய்களுக்கு பிரபலமானது.

எனவே, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் நோய்களைத் தடுக்க உதவும் உணவுகளை உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் உணவை வீட்டிலேயே தயாரிக்கிறீர்கள் என்பதையும், சரியான சுகாதாரம் மற்றும் கவனிப்புடன் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்வதும் முக்கியம். ஷெரில் சாலிஸ், ஊட்டச்சத்து நிபுணர், RD, CDE ஆகியோரின் சில எளிதான சூப் ரெசிபிகள் இங்கே உள்ளன, அவை வீட்டில் சுவையான மற்றும் ஆரோக்கியமான சூப்களை தயாரிக்க உதவும்.

உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்டு 1 கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு மாதம் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக அறிவித்து, இதற்காக இன்று முதல் வருகின்ற 7-ஆம் தேதிவரை விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

குழந்தை பிறந்து 2 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குறைந்தது 1 வருடமாவது தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பால்  கொடுப்பதினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
 
குழந்தை பிறந்த உடனே இந்த தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில்  ஜீரணமாகிவிடும். இது தவிர குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல்  தடுக்கிறது. 

நன்மைகள்:
 
> தாய்ப்பால் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு, சர்க்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்ற சக்திகள் சரியான அளவில்  கிடைக்கிறது.
 
> தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. எனவே 6 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பது கெடுதலாகும்.
 
> தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இதனால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கிறது. 
 
> தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு டைப் 2 நீரிழிவு, மனஅழுத்தம், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதில்லை  ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

ALSO READ | நோயோதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹால்டி ஐஸ்கிரீம்... அசத்தும் அமுல்!!

பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்: 

பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் அவர்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் என்பது அவர்களின் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், தாய்மை பருவத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் கொடுக்கும் பால் குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது என்பது தான் உன்மை.

புகைப்பிடிக்கும் தாய்மார்கள் ஊட்டும் தாய்பாலின் பாதிப்பு குழந்தைகளிடம் ஆரம்பகட்டத்தில் காண்பிப்பதில்லை என்ற போதிலும் குழந்தைகளின் 6 முல் 7 வயதுகளில் அவர்களின் அறிவாற்றல் திறமைகளை குறிவைத்து தாக்குகிறது.

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் தால் ஊட்டச்சத்து என்பது பல அறிஞர்களின் கூற்று என்னும் போது அந்த தாய்பாலையே விஷமாக மாற்றும் திறமை அந்த தாய்மார்களிடமே உள்ளது. அதனை மாற்றாமல் இருக்க வேண்டும் எனில் பெண்கள் புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்களை கைவிடுதல் அவசியமாகிறது.

Trending News