கருப்பு என்கிற நெருப்பு அணையாது! ஸ்டாலின் டிவிட்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், பல்வேறு 

Last Updated : Apr 12, 2018, 11:58 AM IST
கருப்பு என்கிற நெருப்பு அணையாது! ஸ்டாலின் டிவிட்! title=

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.

சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. அதன்படி சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. 

இந்நிலையில் இதுதொடர்பாக டிவிட்டரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து இன்று, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் இல்லங்களின் கருப்புக் கொடியேற்றியும், கருப்புடையணிந்தும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இனியாவது, விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்!

விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது! 

 

 

 

 

இவ்வாறு டிவிட் செய்துள்ளார்.

Trending News