பெண் சுகம் கேக்குதோ?... நெறியாளருக்கு செம பதிலடி கொடுத்த பப்லு

பெண் சுகம் கேக்குதோ என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு நடிகர் பப்லு கொடுத்திருக்கும் பதில் வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 30, 2022, 09:08 AM IST
  • பப்லு 23 வயதுடைய பெண்ணை காதலித்துவருகிறார்
  • இவருக்கு அஹத் என்ற மகன் இருக்கிறார்
  • பப்லு கொடுத்திருக்கும் பேட்டி வைரலாகியுள்ளது
பெண் சுகம் கேக்குதோ?... நெறியாளருக்கு செம பதிலடி கொடுத்த பப்லு title=

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பப்லு ப்ரித்விராஜ். சினிமாவில் மட்டுமின்றி சீரியல்களிலும் அதிகம் நடிக்கும் பப்லு சிறப்பாக நடனம் ஆடக்கூடியவரும்கூட. ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்பு நடுவராக பங்கேற்றபோது இவருக்கும், சிம்புவுக்கும் முட்டிக்கொண்டது இன்னமும் பலருக்கு நினைவிருக்கலாம். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்துவருகிறார். இவருக்கு தற்போது 56 வயதாகிறது. ஏற்கனவே பீனா என்பவரை திருமணம் செய்துகொண்ட பப்லுவுக்கு அஹத் என்ற மகன் இருக்கிறார். ஆட்டிஸம் குறைபாடுடைய அஹத்தை பப்லு மிக கவனமாகவும், பாசமாகவும் கவனித்துவருகிறார்.

Babloo

இந்தச் சூழலில் பப்லு மலேசியாவில் தொழில் தொடங்கியதாகவும் அங்கு அவருக்கு 23 வயதுடைய ஷீட்ல என்ற பெண் உதவி செய்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரபல யூட்யூப் சேனலுக்கு ஷீட்லவுடன் பப்லு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியின்போது நெறியாளர், “பொம்பள சுகம் கேக்குதோ” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பப்லு, ”கேட்குதே. என்னை பாருங்கள். எனக்கு தினமும் வேண்டும்” என்றார். தற்போது பப்லுவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன், காந்தாரா இந்து மதத்துடையது - கங்கனா ரணாவத்

மேலும் அந்தப் பேட்டியில், “ காதல், பாசம், இன்பம், துன்பம் என எதிலும் பீனா சிறந்த மனைவியாக நடந்துகொள்ளவில்லை. அவர் சரியாக நடந்துகொள்ளாததால்தான் இப்போது 23 வயது பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறேன். 6 வருட தனிமையை இவர் சரிசெய்தார். பீனாவிடம் கிடைக்காத அனைத்தும் இவரிடம் இவரிடம் கிடைக்கிறது” என்றார். 

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து தனது யூட்யூப் சேனல் மூலம் விளக்கமளித்த பப்லு, “இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக பலர் ஃபோன் போட்டு கேட்கிறார்கள். திருமணம் செய்யப்போகிறேன், ஆனால் இப்போது இல்லை, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையை தனித்தனியாக வைக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேசியாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் சிலர் அதை விடமாட்டேன் என்கிறார்கள்.

நான் எதை செய்தாலும் அதை வெளிப்படையாக செய்பவன். உங்கள் எல்லோருக்கும் தெரிந்து உங்கள் ஆசீர்வாதத்துடன்தான் திருமணம் செய்வேன். திருட்டுத்தனமாக எதையும் செய்யமாட்டேன்” என கூறியிருந்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News