முன்னாள் மனைவிக்காக பாடல் பாடிய தனுஷ்-வெட்கப்பட்ட ஐஸ்வர்யா! வைரல் வீடியோ..

Actor Dhanush Singing For Aishwarya Dhanush Viral Video : நடிகர் தனுஷ், தனது முன்னாள் மனைவிக்காக பாடல் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 10, 2024, 02:00 PM IST
  • தனுஷ் ஐஸ்வர்யாவின் வைரல் வீடியோ
  • ஐஸ்வர்யாவிற்காக பாடல் பாடிய தனுஷ்
  • இவர்களுக்கு சமீபத்தில் விவாகரத்து வாங்கினர்
முன்னாள் மனைவிக்காக பாடல் பாடிய தனுஷ்-வெட்கப்பட்ட ஐஸ்வர்யா! வைரல் வீடியோ.. title=

Actor Dhanush Singing For Aishwarya Dhanush Viral Video : தமிழ் திரையுலகில் தற்போது டாப் ஹீரோக்களுள் ஒருவராக இருப்பவர், நடிகர் தனுஷ். இவரும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சமீபத்தில் விவாகர்த்து பெற்றதை தொடர்ந்து இவர்களுடைய வீடியாே ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விவாகரத்து பெற்ற தனுஷ்-ஐஸ்வர்யா:

நடிகர் தனுஷும், இயக்குநரும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் 2004ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். இருவரும், 18 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக 2022ஆம் ஆண்டு தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் பரஸ்பர விவாகரத்து கேட்டு இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். தங்கள் திருமணம் செல்லாது என அறிவிக்கும் படியும் அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தனர். இந்த செய்தி ரசிகர்களின் மனதை நொறுக்கியதை அடுத்து இவர்களின் பழைய வீடியாே ஒன்றை தற்போது வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஐஸ்வர்யாவிற்காக பாட்டு பாடிய தனுஷ்..

நடிகர் தனுஷ், 2021ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒரு பார்டியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்காக மைக்கில் ஒரு பாடலை பாடியிருந்தார். இது குறித்து வைரலாகும் அந்த வீடியாேவில் அவர், “கைகள் சீப்பை தேடுது தானே, கண்கள் உன்னை தேடுது மானே..” என்று ஐஸ்வர்யாவை நோக்கி ரொமாண்டிக்காக பாடுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. 

தனுஷ் பாடிய இந்த பாடல், ரஜினிகாந்த் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்தின் பாடலாகும். இதை தற்போது வைரலாக்கி வரும் ரசிகர்கள், “இப்படி இருந்தவங்க இப்போ இப்படி பிரிஞ்சிட்டாங்களே..” என்று இணையத்தில் அங்கலாய்த்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகை! யார் தெரியுமா?

ஐஸ்வர்யா-தனுஷ் காதல் கதை..

2003ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த சமயம் அது. அதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் அவர் திரையுலகிற்குள் எண்ட்ரி ஆகியிருந்தார். அந்த படத்தின் ‘ஸ்பெஷல்’ ஷாேவில்தான் தனுஷும் ஐஸ்வர்யாவும் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. தொலை பேசி மூலம் காதலை வளர்த்த இவர்கள், அடிக்கடி நேரிலும் சந்தித்து கொண்டுள்ளனர். பிறகு, இருவீட்டாரின் சம்மதத்துடனும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தனுஷ்-ஐஸ்வர்யாவின் திருமணம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி, 2004ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர். தாங்கள் பிரிந்து இருந்தாலும், தங்களின் குழந்தைகளை கோ-பேரண்டிங் முறையில் இருவரும் வளர்த்து வருகின்றனர். 

விவாகரத்து குறித்து பேசவில்லை..

தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே தங்களது விவாகரத்து குறித்து வெளியில் பேசவில்லை. ஐஸ்வர்யா, லால் சலாம் படத்திற்கு பிறகு தற்பாேது தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தனுஷும் இளையராஜாவின் பயோபிக்கில் ஹீரோவாக இருக்கிறார். 

மேலும் படிக்க | தளபதி 69-ல் 3 நாயகிகள்?! ஒன்று த்ரிஷா, இன்னொன்று சமந்தா 3வது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News