பொங்கல் ரிலீஸ் ரேஸில் வாரிசு இல்லை; படப்படிப்பு தாமதத்துக்கு காரணம் இதுதான்

பொங்கல் ரிலீஸாக வாரிசு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு தள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 22, 2022, 10:42 AM IST
  • வாரிசு திரைப்படத்தின் அப்டேட்
  • பொங்கலுக்கு ரிலீஸாகுமா? என எதிர்பார்ப்பு
பொங்கல் ரிலீஸ் ரேஸில் வாரிசு இல்லை; படப்படிப்பு தாமதத்துக்கு காரணம் இதுதான் title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய், வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முதன்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகும் படம். இதில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஏற்கனவே சென்னை, ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டனம் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது.அடுத்தகட்ட படப்பிடிப்புகளுக்கும் விரிவாக பிளான் செய்து, ஷெட்யூல் போட்டிருந்த நிலையில் இயக்குநர் வம்சி பைடிபல்லிக்கு உடல் நிலை சரியில்லலாததால் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறதாம். 

பொங்கல் ரிலீஸை மனதில் வைத்து தான் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கேற்ப படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் எதிர்பார்க்கலாம் என காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, ஷூட்டிங் தாமதம் என்ற தகவல் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொங்கலை தளபதி பொங்கலாக கொண்டாடலாம் என காத்திருந்தனர். ஆனால், திட்டமிட்டப்படி ஷூட்டிங் ஷெட்யூல் தொடங்கப்படாமல், தள்ளிப்போயக்கொண்டிருப்பதால் வாரிசு பொங்கல் ரிலீஸ் என்பது இப்போதைக்கு கேள்விக்குறி என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

அதேவேளையில் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் சில லீக்காகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. விஜய்யின் மகன் சஞ்சய் கூட, வாரிசு படத்தின் லீக் காட்சிகளை ஷேர் செய்ய வேண்டாம் என ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். அடுத்தடுத்து லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களால் கடும் அதிர்ச்சியடைந்த படக்குழு, படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறார்களாம். மேலும், பணிபுரியும் ஆட்களிடமும் கெடுபிடி காட்டப்படுகிறதாம். இந்தப் படம் குடும்ப கதையை மையமாக வைத்து உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆக்ஷன், காதல், செண்டிமென்ட் என அனைத்து அம்சமும் பொருந்திய பக்காவான என்டர்டெயின்மென்ட் பிலிம்மாக இருக்கும் என அதில் நடித்திருக்கும் சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வனில் வைரமுத்துவுக்கு கல்தா - ஏ.ஆர்.ரஹ்மான்தான் காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News