நீயா-நானா: இணையதளத்திற்கு சவால் விட்ட விஷால்

Last Updated : Mar 9, 2017, 11:58 AM IST
நீயா-நானா: இணையதளத்திற்கு சவால் விட்ட விஷால்  title=

நீயா நானானு பார்த்துக்கலாம் என தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால் விடுத்துள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை போல் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘சிம்பா’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். 

இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், காந்திகிருஷ்ணா, வெங்கட் பிரபு நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, பிரசன்னா, பிரித்வி பாண்டியராஜன், அரவிந்த், அஜய், நடிகைகள் சினேகா, தன்ஷிகா கலந்து கொண்டனர்.

அப்பொழுது விஷால் பேசியதாவது:-

எப்போதுமே தடைகளைத் தாண்டி ஒரு படம் வந்தால் கண்டிப்பாக ஜெயிக்கும். இப்படம் தடைகளைத் தாண்டி வருகிறது. ஆகையால் கண்டிப்பாக ஜெயிக்கும். தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கு பின் தான் இந்த படம் வெளியாகும். அந்த சமயத்தில் இந்த படம் எந்த இணையதளத்திலும் வெளியாகாது என நான் உறுதியா சொல்கிறேன். ஏப்ரல் 2-ம் தேதிக்கு பிறகு நீயா நானானுக்கு பாத்துக்கலாம்.

மேலும் விஷால் சந்திரசேகரின் இசையைக் கேட்டுள்ளேன். ஆனால் அவரோடு இணைந்து பணிபுரிந்ததில்லை. விரைவில் அவரோடு பணிபுரிய வேண்டும். இப்படத்தின் கதைகளத்துக்கு என்ன தணிக்கை கிடைக்கும் என்று தெரிந்திருக்கும். இதனை தயாரித்துள்ள தயாரிப்பாளரின் தைரியத்தைப் பாராட்டுகிறேன். தமிழ் திரையுலகில் விஜய்க்குப் பிறகு சிறப்பாக நடனமாடக்கூடியவர் பரத்தான். அவருக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று பேசினார் விஷால்.

 

 

Trending News