4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இயக்குநராக சேரன்...

4 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் ‘திருமணம்’[சில திருத்தங்களுடன்] என்னும் திரைப்படத்தின் இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு திரும்புகின்றார் இயக்குநர் சேரன்!

Last Updated : Dec 12, 2018, 02:06 PM IST
4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இயக்குநராக சேரன்... title=

4 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் ‘திருமணம்’[சில திருத்தங்களுடன்] என்னும் திரைப்படத்தின் இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு திரும்புகின்றார் இயக்குநர் சேரன்!

இன்று தனது 54-வநு பிறந்தநாளினையொட்டி காலை பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுப்பட்டார். இந்த சந்திப்பின் போது தனது அடுத்த திரைப்படமான ‘திருமணம்’[சில திருத்தங்களுடன்] குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்திற்கு பின்னர் நீண்ட ஓய்வில் இருந்த சேரன் தற்போது மீண்டும் திரையுலகம் திரும்புகின்றார். இடைப்பட்ட காலத்தில் ‘சிஹெச் 2 போன்ற சிக்கல்களில் சிக்கிய சேரன், திரைப்பட பூஜை மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று தனது சினிமா வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தினை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். 

இத்திரைப்படத்தின் நாயகனாக நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கிறார். ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’ ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நான்கு ஆண்டுகால ஓய்விற்கு பின்னர் படம் இயக்க வந்திருப்பதால் தன்னுடைய பெஸ்ட் படமாக ‘திருமணம்’ திரைப்படத்தினை சேரன் வழங்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் சேரன் நடிக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News