பிக்பாஸ் 7: “ஐஷூ வெளியேறிதற்கு காரணம் இவங்கதான்..” நிக்ஸன் சொன்ன சர்ச்சை கருத்து!

Bigg Boss 7 Tamil Aishu Eviction: பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் இருந்து முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட ஐஷூ, நேற்று வெளியேற்றப்பட்டார். 

Written by - Yuvashree | Last Updated : Nov 13, 2023, 01:28 PM IST
  • பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து ஐஷு எவிக்ட் ஆனார்.
  • இவர் நிகஸனுடன் நெருக்கமாக பழகி வந்தார்.
  • ஐஷூவின் எவிக்‌ஷன் குறித்து நிக்ஸன் பேசியுள்ளார்.
பிக்பாஸ் 7: “ஐஷூ வெளியேறிதற்கு காரணம் இவங்கதான்..” நிக்ஸன் சொன்ன சர்ச்சை கருத்து! title=

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே மிக அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக கருதப்படுவது, பிக்பாஸ். பிற மொழிகளில் பல ஆண்டுகளாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, தமிழில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பித்தது முதல் இப்போது வரை, நடிகர் கமல்ஹாசன்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக்பாஸ் சீசன் 7:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைக்கும் சச்சரவிற்கும் பஞ்சமே இருக்காது. முதல் சீசன் முதல், தற்போது ஒளிபரப்பாகி வரும் 7வது சீசன் வரை (Bigg Boss 7 Tamil) ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் புதிதாக ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுப்பது வழக்கமாகி வருகிறது. அனைத்து சீசனிலும் திரையில் பெரிதாக தெரிந்தவர்களை களமிறக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த சீசன் டிஜிட்டல் திரையில் தெரிந்தவர்களையும் போட்டியாளர்களாக இறக்கியுள்ளது. அது மட்டுமன்றி, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக இன்னும் ஐந்து பேரை இறக்கியுள்ளனர். இவர்களும் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளனர். 

எவிகட் ஆன ஐஷூ..

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 43 வது நாளை கடந்துள்ளது. இதில் வந்த புதிதில் அமைதியாக இருந்து பின்னர் பெரிதாக பேசப்பட்டவர், ஐஷூ. இவரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான அமீரும் உறவினர்கள் என கூறப்படுகிறது. பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த சில நாட்கள் அமைதியாக யாருடனும் பெரிதாக பேசாமல் இருந்த ஐஷூ, கடந்த சில வாரங்களாக நிக்ஸனுடன் நெருக்கமாக பழகி வந்தார். 

மேலும் படிக்க | பிக்பாஸில் புதிய ட்விஸ்ட்! வீட்டிற்குள் நுழைந்த புகழ் மற்றும் ஸ்ருஷ்டி!

ஐஷூ, நிக்ஸனுடன் பழகி கொண்டிருந்த போதே தனக்கு வெளியில் ஒரு காதலர் இருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நிக்ஸனும் ஐஷுவும் பழகி வந்தனர். இதனால் ஐஷூ மீது ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஐஷூ-நிக்ஸனின் நெருக்கத்தால் இவர்களின் விளையாட்டும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று கமல்ஹாசன் எபிசோடின் போது, ஐஷூ குறைவாக வாக்குகள் பெற்ற காரணத்தினால் எவிக்ட் செய்யப்பட்டார். 

ஐஷூ எவிக்ஷன் குறித்து பேசிய நிக்ஸன்..

ஐஷூ நேற்று போட்டியை விட்டு வெளியேறிய பிறகு, நிக்ஸன் உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்.

பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகன் சரவண விக்ரமிடம் “இவங்க எதிரில் இதெல்லாம் பண்ணவே கூடாது..ஒரு பொண்ணு கிட்ட பேசுனா..பழகுனா..தப்பா..?” என்று பேசினார். மேலும், “அவளோட வீட்டில் இத புரிஞ்சிக்கனும். இங்க நடந்தது எல்லாமே சும்மா என்று அவங்க தெரிஞ்சிக்கனும்..” என்று பேசினார். இவர் இப்படி பேசியது, “ஐஷூ வெளியேறியதற்கு காரணம் மக்கள்தான்” என்று கூறுவது போல இருந்ததாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதுவரை பிக்பாஸில் இருந்த வெளியேறிய போட்டியாளர்கள்..

பிக்பாஸ் போட்டியின் முதல் வாரத்திலேயே அனன்யா ராவ் வெளியேறினார். இவர் சென்ற அடுத்த நாளே, தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறி, பவா செல்லதுரை வெளியேறினார். இவர்களை அடுத்து, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி ஆகியோர் வெளியேறினர். அதற்கடுத்த வாரம், பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அந்த வாரமே வைல்ட் கார்ட் போட்டியாளரான கானா பாலா வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ஐஷூ வெளியேற்றப்பட்டார். 

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன ஐஷூ..! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News