குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டுவிஸ்ட்.. டென்ஷனான சிவாங்கி, கடுப்பான செஃப்

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு புதிய டுவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் சீசனில் இருந்து ரேகா, இரண்டாவது சீசன் இருந்து ஷகிலா, மூன்றாவது சீசனில் இருந்து ரோஷினி ஆகியோர் வந்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 16, 2023, 09:00 AM IST
  • சிவாங்கியை கடுமையாக திட்டிய செஃப் தாமு.
  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டுவிஸ்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டுவிஸ்ட்.. டென்ஷனான சிவாங்கி, கடுப்பான செஃப் title=

குக் வித் கோமாளி சீசன் 4: குக் வித் கோமாளி தொடர்தான் தற்போது இளசுகள் முதல் அனைத்து தரப்பினருக்குமான முழு பொதுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. சமையல் நிகழ்ச்சியை புதுவிதமாக முயற்சித்து, அதனை தற்போது நான்காவது சீசன் வரை கொண்டு வந்திருப்பதன் மூலம், தொடரின் வெற்றியையும், வீச்சையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அந்த தொடரில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் ஆகியோரின் கூர்மையான தீர்ப்புகள் முதல் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வரை அனைத்து அம்சங்களும் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. சனி, ஞாயிறு தினங்களில் வரும் அந்த ஒருமணிநேர எபிசோட்களை பார்க்க தொலைக்காட்சியிலும், மொபைலிலும் அனைவரும் மூழ்கிவிடுவார்கள். 

அப்படி  ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது ஷெரின், விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி என புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த சீசன் வரை கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, இந்த சீசனில் குக்கு ஆக களமிறங்கி கலக்கி வருகிறார். இதனிடையே இந்த ஷோவில் இருந்து தற்போது வரை கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா, விஜே விஷால் ஆகிய 4 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். 

மேலும் படிக்க | நொடிக்கு நொடி திருப்பம்... துப்பறியும் திரில்லர் - 'அவள் பெயர் ரஜினி' டீசருக்கு வரவேற்பு!

இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் ஒரு புதிய டுவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் சீசனில் இருந்து ரேகா, இரண்டாவது சீசன் இருந்து ஷகிலா, மூன்றாவது சீசனில் இருந்து ரோஷினி ஆகியோர் வந்துள்ளனர். மேலும் இந்த வாரம் பரத், சரத் ஆகிய இரண்டு கோமாளிகள் இணைந்துள்ளனர். அத்துடமன் நேற்றைய எபிசோடில் ரோஷினி மற்றும் குரேஷி அட்வான்ஸ் வென்றனர்.

அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியின் போது சிவாங்கிக்கு பாகற்காய் சமைக்க வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. அப்போது அவர் தன்னால் பாகற்காய் சமைக்க முடியாது என்று கூற, இதனால் கடுப்பான செஃப் தாமு நீங்கள் ஒரு போட்டிக்கு வந்துள்ளீர்கள், தற்போது வரை 15 வாரங்கள் கடந்துள்ளது. அதனால் நாங்கள் கொடுத்த பொருளை வைத்து சமைக்க வேண்டும், முடியாது என்று கூறிய அடம்பிடிக்க கூடாது என்று கடுமையாக திட்டினார். இதனை அடுத்து சிவாங்கியின் முகம் சோகமாகியது.

மேலும் படிக்க | ருத்ரன் படத்தின் ருத்ரதாண்டவம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News