அடிதடி அதிரடியாய் களைகட்டும் தெய்வம் தந்த பூவே லேட்டஸ்ட் எபிசோட்

Zee Tamil Serial Updates: வினய் எடுக்க போகும் அதிர்ச்சி முடிவு, மித்ரா வாழ்க்கையில் நடக்க போவது என்ன? தெய்வம் தந்த பூவே சீரியல் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 12, 2023, 11:25 AM IST
  • தெய்வம் தந்த பூவே சீரியல் லேட்டஸ்ட் தகவல்கள்
  • வினய், மித்ரா இடையே மீண்டும் மோதலா?
  • பரபரபபன திருப்பங்களைக் கொடுக்கும் அடிதடி
அடிதடி அதிரடியாய் களைகட்டும் தெய்வம் தந்த பூவே லேட்டஸ்ட் எபிசோட் title=

வினய் எடுக்க போகும் அதிர்ச்சி முடிவு, மித்ரா வாழ்க்கையில் நடக்க போவது என்ன? எதிர்பாராத திருப்பங்களுடன் தெய்வம் தந்த பூவே சீரியல் அனைவருக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தெய்வம் தந்த பூவே.

இந்த சீரியலில் வினய்யை கார்த்திக் கொல்ல நினைத்த நிலையில் அவன் தான் இதற்கெல்லாம் காரணம் என போலீஸ் ஆதாரத்துடன் கார்த்திக்கை கைது செய்தது. 

இதனை தொடர்ந்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது மித்ரா வினய் சொன்னனது அத்தனையும் உண்மை தான் என்பதை புரிந்து கொள்ள வினய் நீ எப்பவும் என்னை நம்ப மாட்ட, உனக்கு எப்போதும் சந்தேகம் தான் என கோப்படுகிறான். 

அதோடு நிறுத்தால் இனிமேலும் நமக்கு செட் ஆகாது, நம்ம பையனை நல்லபடியா பார்த்துக்க என சொல்லி சென்னை கிளம்பி வர வினய்யின் மாமா மித்ராவை சென்னைக்கு அழைத்து வருகிறான்.

இதை பார்த்த வினய் மித்ராவை திட்டி வெளியே அனுப்புகிறான். இதனால் வீட்டை விட்டு வெளியேறும் மித்ராவுக்கு வினய்யின் சித்தப்பா சித்தி அடைக்கலம் தருகின்றனர். 

இந்த நிலையில், மித்ராவை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறான் வினய். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தெய்வம் தந்த பூவே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Ponniyin Selvan 2 review: பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

மித்ராவை தங்க வைத்த கார்த்தி

இதற்கு முன்னதாக, தன்யாவுக்கு உடல்நிலை சரியாகி விட்டதால் வீட்டுக்கு கிளம்பலாம் என வினய் சொல்லும்போது, மித்ராவை சமாதானம் சொல்லி கார்த்தி தங்க வைக்கிறான். 

மித்ராவை கொல்ல சதி

அதோடு எல்லோரும் சேர்ந்து ட்ரிப் ஒன்று செல்லாமல் என சொல்லி அனைவரையும் சம்மதிக்க வைக்கும் கார்த்தி, போகும் இடத்தில் வினய்யை கொன்று விட்டு மித்ராவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என திட்டம் போடுகிறான். திட்டம் பலித்ததா? இல்லை கார்த்தியின் திட்டம் என்ன? அந்த திட்டத்தால் யாருக்கு என்ன பிரச்சனை? தெரிந்துக் கொள்ள, ‘தெய்வம் தந்த பூவே' உங்கள் அபிமான மெகாத் தொடரை தொடர்ந்து பாருங்கள்.

மேலும் படிக்க | அடேங்கப்பா..சமந்தா வாங்கிய புதிய பிரமாண்ட வீடு..இவ்வளவு கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News