‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ரஜினி ரசிகராக மாறிய விஜய்யின் மகன்..!

ஜெயிலர் படத்தை பார்த்த பிறகு, விஜய்யின் மகன் மொத்தமாக ரஜினி ரசிகராக மாறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Aug 12, 2023, 08:20 AM IST
  • விஜய்யின் மகன் முழு ரஜினி ரசிகராக மாறியுள்ளார்.
  • இவர் தலைவா என கத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
  • இந்த வீடியோவை ஜெயிலர் படம் பார்த்த பிறகு எடுத்துள்ளனர்.
‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ரஜினி ரசிகராக மாறிய விஜய்யின் மகன்..!  title=

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமன்றி ஏராளமான பிரபலங்களும் நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளனர். அந்த வரிசையில், இயக்குநர் விஜய்யும் அவரது குட்டி க்யூட் மகனும் இணைந்துள்ளனர். 

இயக்குநர் விஜய்:

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களுள் ஒருவர், ஏ.எல்.விஜய். இவர், அஜித்குமார் நடித்திருந்த ‘கிரீடம்’ படம் மூலம் தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை முன்னணி ஹீரோக்களை வைத்து எடுத்தார். பின்னர், தேவி, பூ போன்ற படங்கள் மூலம் தனக்கு பேய் படங்களும் எடுக்க வரும் என்பதை நிரூபித்தார். 

மேலும் படிக்க | ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

AL Vijay

விவாகரத்து-இரண்டாம் திருமணம்:

இயக்குநர் விஜய், பிரபல நடிகை அமலா பாலை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ‘தலைவா’ படத்தின் ஷூட்டிங்கின் போது காதலில் விழுந்தனர். 2014ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளில் ஒருவரை ஒருவர் பிரிந்து விவாகரத்து பெற்று விட்டனர். அதன் பிறகு, விஜய் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் ஐஸ்வர்யா என்பவரை கரம் பிடித்தார். இவர்களுக்கு தற்போது மூன்று வயதில் துருவா என்ற மகன் உள்ளார். விஜய், தனது மகனுடன் ஜெயிலர் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ:

விஜய் காரில் அமர்ந்திருப்பது போலவும், அவரது மகன் துருவா அவருடன் காரில் அமர்ந்திருப்பது போலவும் அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

4 விநாடிகள் மட்டுமே இருக்கும் அந்த வீடியோவில் விஜய்யின் மகன் துருவா, “தலைவா..” என்று தனது க்யூட் குரலில் கத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. 

விஜய்யின் அடுத்த படம்:

இயக்குநர் விஜய், தலைவா படத்திற்கு பிறகு அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை பெரிதாக எடுக்கவில்லை. கமர்ஷியல்-காமெடி பக்கம் சென்றுவிட்டார். தற்போது அவர் அருண் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்திற்கு ‘மிஷன்-சேப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல ஆங்கில-தமிழ் நடிகை எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைப்பெற்றது. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | விரைவில் முடிவுக்கு வருகிறதா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர்..? சோகத்தில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News