EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: புத்தாண்டுக்கு முன் அரசின் பரிசு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்

EPFO Wage Ceiling Hike: தனியார் துறை ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி. தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் புத்தாண்டுக்கு முன்னதாக அதிகரிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 26, 2024, 05:03 PM IST
  • தனியார் துறை ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி.
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு.
  • சம்பள வரம்பை உயர்த்த கோரிக்கை.
EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: புத்தாண்டுக்கு முன் அரசின் பரிசு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்

EPFO Wage Ceiling Hike: கடந்த சில மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் கிடைத்து வருகின்றன. இப்போது தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் புத்தாண்டுக்கு முன் ஒரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Private Sector Employees: தனியார் துறை ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி

தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் புத்தாண்டுக்கு முன்னதாக அதிகரிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அரசாங்கம் UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய அமைப்பை (Unified Pension Scheme) அமல்படுத்தியது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பயன் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இதனால் மன வருத்தத்தில் உள்ளனர். 

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு

தனியார் துறை ஊழியர்களின் வருத்தத்தை போக்க, அரசு முழு முனைப்புடன் முயற்சித்து வருகின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ -வில் அடிப்படை சம்பள உயர்வுக்கு அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.10,500 ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும் படிக்க | அடிப்படை ஊதியத்துடன் இணைகிறதா 53% அகவிலைப்படி? எக்கச்சக்கமாய் எகிறப்போகும் சம்பளம்

EPFO Wage Ceiling Hike: சம்பள வரம்பை உயர்த்த கோரிக்கை

தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் ஒரு முன்மொழிவை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. அதில் ஓய்வூதியம் கணக்கிட தற்போதுள்ள ரூ.15,000 என்ற ஊதிய வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் ஓய்வூதியம் ரூ.15,000 -இன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகின்றது. அதன் வரம்பை உயர்த்துவது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இது மிக விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள வரம்பு ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் இபிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்.

EPF Contribution: மாத சம்பளத்தில் மாற்றம் இருக்கும்

சம்பள வரம்பு ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் பெறும் சம்பளத்தில், இபிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும், அதாவது அதிக பணம் EPFO ​​க்கு செல்லும். இதனால் மாத சம்பளம் சற்று குறையும். ஆனால் இது ஊழியர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. அரசு சம்பள வரம்பை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 21 ஆயிரம் ரூபாயாக மாற்றினால், மாதந்தோறும் ரூ.2550 கூடுதல் ஓய்வூதிய பலன் கிடைக்கும்.

EPFO-ன் கீழ் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய உச்சவரம்பு ரூ.21,000 ஆக மாற்றப்பட்டால், ஓய்வுபெறும் போது இந்த பலன் கிடைக்கும். இது ஓய்வூதியம் மற்றும் இபிஎஃப் தொகையில் (EPF Amount) நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) பங்களிப்பும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.12,000 முதலீட்டை... ரூ.2 கோடியாக பெருக்கும் 12x12x24 ஃபார்முலா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News