ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 என நீண்டிருக்கும்... செல்வராகவன் கூறிய சுவாரஸ்ய தகவல்

ஆயிரத்தில் ஒருவன் படம் கொண்டாடப்பட்டிருந்தால் அது 2,3,4 பாகங்களாக நீண்டிருக்குமென்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 2, 2022, 01:17 PM IST
  • ஆயிரத்தில் ஒருவன் படம் 2010ஆம் ஆண்டு வெளியானது
  • படத்துக்கு அப்போது பெரிய வரவேற்பு இல்லை
  • இப்போது பலரும் கொண்டாடுகின்றனர்
ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 என நீண்டிருக்கும்... செல்வராகவன் கூறிய சுவாரஸ்ய தகவல் title=

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த பகையை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அப்படம் வெளியானபோது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல அனைவரும் ஆயிரத்தில் ஒருவனை கொண்டாடிவருகின்றனர். மேலும் ரியாலிட்டியோடும், வழக்கமான மன்னர் படங்களின் டெம்ப்ளேட்டுகளை மீறியும் ஒரு படம் வந்தது என்றால் அது தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் மட்டும்தாம். குறிப்பாக செல்வராகவனின் காட்சியமைப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்தின் முக்கியமான ப்ளஸ்கள்.

மேலும், அந்தப் படத்தில் சோழ மன்னர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருந்தார். அவரது நடிப்பு படத்துக்கு மிகவும் பலமாக இருந்தது. இந்தச் சூழலில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டு உருவாவதை செல்வராகவன் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் தனுஷ் சோழ மன்னர் வேடத்தை ஏற்கவிருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படமானது 2024ஆம் ஆண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

aayirathil oruvan

இந்தச் சூழலில் செல்வராகவன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நெறியாளர், ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது நாங்கள் கொண்டாடவில்லை அது எங்கள் தவறுதான். ஆனால் தற்போது கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம். இதை பார்க்கும்போது ஒரு படைப்பாளியாக உங்களுக்கு என்ன தோன்றுகிறது என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | பிரபல யூடியூபரை போட்டியாளராக்கும் பிக்பாஸ் தமிழ் டீம்: அடடே பலே ஐடியாவா இருக்கே

அதற்கு பதிலளித்த செல்வராகவன், “ஒரு படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காதபோது நிச்சயம் அது வருத்தத்தை கொடுக்கும். அப்படித்தான் ஆயிரத்தில் ஒருவனும். அந்தப் படம் வந்திருந்தபோதே கொண்டாடப்பட்டிருந்தால் நிச்ச்யம் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள் என சென்றிருக்கும்” என்றார்.

aayirathil oruvan

தற்போது செல்வராகவனின் இந்தப் பேட்டி வைரலாகியுள்ளது. மேலும், அப்போதே படத்தை கொண்டாடியிருந்தால் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் இந்திய அளவில் எப்படி சென்று சேர்ந்ததோ அதைவிட அதிகம் ஆயிரத்தில் ஒருவன் சென்று சேர்ந்திருக்கும் எனவும் நெட்டிசன்ஸ் கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் வெற்றி: மணிரத்னதுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த அன்பு பரிசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News