ஜானி டெப் அவதூறு வழக்கு- ரூ.116 கோடி இழப்பீடு தர நடிகைக்கு நீதிமன்றம் உத்தரவு

Johnny Depp vs Amber Heard: முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் ஜானி டெப்பிற்கு ஆதரவான தீர்ப்பு வெளியாகியுள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 2, 2022, 11:05 AM IST
  • ஜேக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் மூலம் இந்திய மக்களிடம் பிரபலமடைந்தவர் ஜானி டெப்
  • வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு கட்டுரை வைரல்
ஜானி டெப் அவதூறு வழக்கு- ரூ.116 கோடி இழப்பீடு தர நடிகைக்கு நீதிமன்றம் உத்தரவு title=

பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் திரைப்படத்தில் ஜேக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் மூலம் இந்திய மக்களிடம் பிரபலமடைந்தவர் ஜானி டெப். இவர் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் இன்று ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

 கடந்த 2015 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ரசிகர்களைச் சேர்த்த ஜானி டெப், 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு அவரை கரம்பிடித்தார். 15 மாதங்களில் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தது பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர். பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு கட்டுரை ஆம்பர் ஹேர்ட் எழுதினார், அதில் அவர் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஜானியின் பெயரை குறிப்பிடாமல் அதில் எழுதி இருந்தார். அவர் அந்த கட்டுரையில் தெரிவித்தது ஹாலிவுட் உலகை அதிரவைத்தது. அத்துடன் இந்த கட்டுரை வெளியானதில் இருந்து ஜானி டெப் பட வாய்ப்புகளை இழந்தார்.

மேலும் படிக்க | ‘விஜய்-68’ படத்தை இயக்கும் சிறுத்தை சிவா?!- ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் தகவல்!

இதன்பின் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஜானி டெப், ஆம்பர் மீது கட்டுரைக்கு குற்றம்சாட்டி அவதூறாக ரூ.380 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்தார். தனது சினிமா வாழ்க்கையை ஆம்பர் சிதைத்து வருவதாக ஜானி தொடர்ந்த வழக்குதான் பெரிய அளவில் பேசப்பட்டது வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதுவும் இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த இறுதிகட்ட விசாரணை உலக அளவில் பேசுபொருளானது.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப்பிற்கு ஆதரவான தீர்ப்பே வெளியானது. அதன்படி, ஜானி டெப்பிற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஆம்பர் செயல்பட்டது உறுதியானதாக என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஜானி மீது ஆம்பர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுகளும் போலியானவை என கோர்ட்டு தெரிவித்தது. இதன் மூலம் அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும், அபராதமாக 38 கோடி ரூபாயும் என மொத்தம் 116 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

ஜானிக்கு ஆதரவான தீர்ப்புகள் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஜானி டெப் ஆதரவாளர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருவதால் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன.

இந்த தீர்ப்பு வெளியான உடனேயே, ஜானி டெப் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதன்படி அதில்,

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Johnny Depp (@johnnydepp)

 

மேலும் படிக்க | இயக்குநர் சங்கர் மகள் அதிதி சங்கரின் கிரஷ் இந்த நடிகராம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News