கார்த்திகை தீபம் அப்டேட்: காத்திருக்கும் அதிரடியான திருப்பங்கள், இன்று நடக்கப்போவது என்ன?

Karthigai Deepam Today's Episode Update: அதிரடியான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம், இன்று நடக்க போவது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட் இதோ

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 2, 2023, 10:58 AM IST
  • சீட்டு போட்டு பார்த்த மீனாட்சி.
  • ரிலீஸ் ஆன துரை..வருந்தும் தீபா...
  • தீபா சாப்டர் க்ளோஸ்: குஷியில் ஐஸ்வர்யா.
கார்த்திகை தீபம் அப்டேட்: காத்திருக்கும் அதிரடியான திருப்பங்கள், இன்று நடக்கப்போவது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்' சீரியல்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் இன்று முதல் 8.45 மணி முதல் 9.30 மணி வரை என 45 நிமிடங்கள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து இந்த ஓதிவில் காணலாம். 

சீட்டு போட்டு பார்த்த மீனாட்சி

மீனாட்சி தீபா, நட்சத்திரா என இருவரின் பெயரை எழுதிப் போட்டு கார்த்தி யார் கழுத்தில் தாலி கட்டுவார் என சீட்டு எடுத்து பார்க்கையில் அதில் தீபா என வந்தது. இதனால் மீனாட்சி சந்தோஷமடைகிறாள். 

Karthigai Deepam

மறுபக்கம் தர்மலிங்கம் கல்யாண மண்டபத்தை பார்க்க வேண்டும், பெண் வீட்டார் அனைவருக்கும் முன்னரே சென்று எல்லோரையும் வரவேற்க வேண்டும், என்ன என்ன அலங்காரம் எல்லாம் செய்திருக்கிறீர்கள் என எங்களுக்கு தெரிய வேண்டும் என சொல்ல ராஜு என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டு இவர்களை அழைத்துச் செல்லும் போது தர்மலிங்கம் வழியில் ஒரு மண்டபத்தை பார்த்து இதுதான் தீபாவுக்கு பார்த்திருக்க மண்டபமா என கேட்கிறார். அதற்கு ராஜு ஆமாம் என சொல்லி சமாளிக்கிறான். 

பிறகு மண்டபத்துக்குச் செல்ல அங்கு பெயர் பலகையில் லட்சுமி என பெயர் போட்டிருப்பதை பார்த்து தர்மலிங்கம், பெயர் லட்சுமி இல்லை தீபா என சொல்ல, ராஜூ, 'தப்பா போட்டு விட்டோம், மாற்றி விடலாம்' என சொல்கிறான். 

பிறகு மண்டபத்துக்குள் சென்று பார்க்க அலங்காரங்கள் எல்லாம் சூப்பராக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கு வரும் மேனேஜர், 'யார் நீங்க' என கேட்கிறார். நாங்க பெண் வீடு, மண்டபம் பார்க்க வந்திருக்கிறோம் என அவர்கள் சொல்ல, இப்போதுதானே பெண் வீட்டில் இருந்து வந்து பார்த்துவிட்டு போனார்கள் என்று மேனேஜர் சொல்ல உடனே ராஜு, 'நாங்கதான் பெண் வீட்டார் அவங்க மாப்பிள்ளை வீட்டாராக இருப்பாங்க' என சமாளிக்கிறான். 

பிறகு தர்மலிங்கம், 'எங்களுக்கு சிவா தம்பி மேல முழு நம்பிக்கை இருக்கு, மைதிலி தான் மண்டபத்தை பாக்கணும்னு சொன்னா, அதனாலதான் நாங்க வந்தோம், நீங்க எதையும் சிவா தம்பி கிட்ட சொல்ல வேண்டாம், அவர் தப்பா எடுத்துக்க வாய்ப்பு இருக்கு' என சொல்ல ராஜு நல்ல வேளையாக ஒரு வழியாக அவர்களை சமாளித்து விட்டோம் என மைண்ட் வாய்ஸ்ல பேசிக் கொள்கிறான். 

ரிலீஸ் ஆன துரை..வருந்தும் தீபா...

அதன் பிறகு தர்மலிங்கம் வீட்டுக்கு கிளம்பலாம் என சொல்ல, ராஜு அவர்களை வீட்டில் கொண்டு வந்து டிராப் செய்துவிட்டு கிளம்புகிறான். கார்த்தியின் நண்பனான போலீஸ் கார்த்திக்கு போன் செய்து, துரை ரிலீஸ் ஆகிவிட்ட விஷயத்தை சொல்ல, அவன் தீபா வீட்டுக்கு வந்து தீபாவிடம், 'உஷாராக இருங்க, எனக்கும் நாளைக்கு கல்யாணம், என்னால வர முடியாது. தப்பா எடுத்துக்காதீங்க' என்று சொல்லிவிட்டு செல்ல, தீபா கார்த்தி மூலம் கழுத்துக்கு வந்த தாலியை பார்த்து கண்ணீர் விட்டு வருந்துகிறாள். 

பிறகு வீட்டுக்கு வந்த தர்மலிங்கம் சிவா தம்பி நல்ல பெரிய மண்டபம் தான் பார்த்து இருக்காரு, நீ தீர்க்க சுமங்கலியா இருக்கணும் என வாழ்த்த, தீபா கார்த்தி உடனான நினைவுகளை நினைத்து பார்க்கிறாள். 

Karthigai Deepam

மேலும் படிக்க | அஜித் ’V’ என்ற எழுத்தில் படங்களின் பெயர்களை வைக்க என்ன காரணம்? மறைந்திருக்கும் ரகசியம் என்ன?

அடுத்ததாக ஐஸ்வர்யா தீபாவுக்கு சிவா பார்த்து இருக்கும் போலி மாப்பிள்ளையை சந்தித்து நீங்க செய்றது தப்பு தான், அந்த நூறு தப்போட 101வது தப்பா தீபா கழுத்தில் உண்மையாகவே தாலி கட்டிட்டு ஓடிப் போயிடுங்க என சொல்ல, அவர்கள் நாங்க சிவாவோட ஆட்கள் அவருக்கு எதிராக நடக்க மாட்டோம் என சொல்கின்றனர். 

தீபா சாப்டர் க்ளோஸ்: குஷியில் ஐஸ்வர்யா

உடனே ஐஸ்வர்யா, 'ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் பணம் தரேன்.. சிவா வேற போதைப்பொருள் கேஸ்ல ஜெயில்ல இருக்கான் அவன் இப்போதைக்கு வெளியே வர முடியாது' என சொல்ல பணத்தை பார்த்ததும் அவர்கள் சரி என ஒப்புக் கொள்கின்றனர். ஐஸ்வர்யா இனி தீபா சாப்டர் குளோஸ் என மைண்ட் வாய்ஸில் பேசிக் கொள்கிறாள். 

அடுத்து செக் போஸ்டில் கதிரை பிடிப்பதற்காக சோதனை நடந்து கொண்டிருக்க, அப்போது கதிர் ஆட்டோவில் அந்த வழியாக வருகிறான். ஆட்டோவுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த பைக்கில் வந்தவனை போட்டோவை வைத்து பரிசோதனை செய்து கொண்டு இருக்க, அதைப் பார்த்த கதிர், 'நம்மள தான் தேடுறாங்க, இவங்க கிட்ட மாட்டினா அவ்வளவுதான்' என ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓடுகிறார். 

போலீசும் கதிரை பின்தொடர்ந்து ஓடி வர அவன் கார்த்தியின் கல்யாணம் நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்து வாசலில் பொம்மை வேஷம் போட்டு நிற்கிறான். போலீஸ் அங்கு வர கார்த்தியின் கல்யாணம் என தெரிந்ததும் கார்த்தியை வெளியே அழைக்க முடிவு செய்கின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | 20க்கும் மேற்பட்ட படங்கள்..2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News