காஷ்மீரில் ஷூட்டிங் முடிந்ததும் 'லியோ' படத்திற்காக லோகேஷின் மாஸ்டர் பிளான்!

'லியோ' படத்தின் சிறிய ஷெட்யூலை படக்குழுவினர் சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தி முடித்த பின்னர் பிப்ரவரி முதல் காஷ்மீர் பகுதியில் நடத்தி வருகின்றனர்.   

Written by - RK Spark | Last Updated : Mar 21, 2023, 08:53 AM IST
  • 'லியோ' படத்திற்கு அக்டோபர்-19 தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது.
  • படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
  • சென்னையில் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.
காஷ்மீரில் ஷூட்டிங் முடிந்ததும் 'லியோ' படத்திற்காக லோகேஷின் மாஸ்டர் பிளான்! title=

லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகிவரும் பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படமான 'லியோ' படத்தின் மீது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.  லோகேஷ்-விஜய் இணையப்போவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியானபோதே அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்த ரசிகர்கள், தற்போது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்து விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.  லியோ படக்குழுவினர் கடும் குளிரையும் பொருட்படுத்தாது காஷ்மீரில் படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  காஷ்மீரில் மகிழ்ச்சியாக படிப்பிடிப்பு நடத்தி வரும் லியோ படக்குழுவினரின் சில புகைபபடங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.  'லியோ' படத்தின் சிறிய ஷெட்யூலை படக்குழுவினர் சென்னையில் நடத்தி முடித்த பின்னர் பிப்ரவரி மாதம் முதல் காஷ்மீர் பகுதியில் நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | இந்த 6 மலையாள திரில்லர் திரைப்படங்களை மறக்காம பாத்துருங்க!

காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்ற போது இயக்குனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நடிகை த்ரிஷா சென்னை திரும்பிவிட்டதாக வதந்திகள் வெளியானது.  அதன்பின்னர் த்ரிஷா தான் காஷ்மீரில் இருப்பதை சமூக வலைத்தளங்களின் மூலம் உறுதிப்படுத்தி தன்னை பற்றி வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்பதை உறுதிப்படுத்தினார்.  தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் முடிந்துவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை தொடர்ந்ந்து பத்து நாட்களுக்கு சென்னை பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்று தயாரிப்பாளர் குழு ஏற்கனவே கூறியிருந்தது.  தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஹைதராபாத் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  

ஹைதராபாதில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த இடத்தில் 'லியோ' படத்தின் பிரம்மாண்டமான க்ளைமேக்ஸ் காட்சி படம்பிடிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  க்ளைமேக்ஸ் காட்சி சுமார் 20 நாட்களுக்கு இந்த பகுதியில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது, ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதோடு 'லியோ' படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்துவிடும்.  செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், சாண்டி, பிக்பாஸ் ஜனனி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் இவரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News