அவமானப்பட்ட ரங்கநாயகி.. வெற்றி போட்ட கண்டிஷன் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்!

சரண்யா எல்லா உண்மைகளையும் சொல்கிறாள். சக்தி கர்ப்பம் இல்லை என்று சொல்ல, இனிமேல் அந்தக் கல்யாணம் நடக்காது என்று செல்வமுருகன் சொல்லிவிட பரபரப்பாக நகர்கிறது மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்!  

Written by - RK Spark | Last Updated : May 9, 2023, 10:09 AM IST
  • ஜீ தமிழ் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
  • திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகிறது.
  • தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
அவமானப்பட்ட ரங்கநாயகி.. வெற்றி போட்ட கண்டிஷன் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரண்யாவைப் பரிசோதிக்கும் டாக்டர் சரண்யா கர்ப்பம் என்பதைச் சொல்லிவிட, ரங்கநாயகி அதிர்ச்சியாகிறாள்.  சரண்யா எல்லா உண்மைகளையும் சொல்கிறாள். சக்தி கர்ப்பம் இல்லை என்று சொல்ல, இனிமேல் அந்தக் கல்யாணம் நடக்காது என்று செல்வமுருகன் சொல்லிவிட, வெற்றி பூஜா கல்யாணம் நின்று போகிறது. ரங்கநாயகி எல்லார் முன்னிலும் அவமானப்பட்டு தன் வீட்டுக்குப் போகிறாள். 

மேலும் படிக்க | வெற்றி திருமணத்தில் சிக்கல்..சாந்தாவுக்கு ஷாக்..மீனாட்சி பொண்ணுங்க இன்றைய அப்டேட்!

 

அதை தொடர்ந்து ரங்கநாயகி தன் வீட்டில் ஒரு அறையில் போய் கதவை பூட்டிக் கொள்கிறாள். பூஜா மண்டபத்தில் தாலியுடனேயே இருக்கிறாள். சரளாவிடம் கோபித்துக்கொண்டு தாலியுடன் வெளியே போகிறாள்.  வெற்றி அசோக்கை கோபத்தில் அடிக்கிறான். இரண்டு நாள் டயம், அதுக்குள்ள ஊர்ப்பஞ்சயாத்துல உண்மையை ஒத்துக்கிட்டு, சரண்யா வயித்துல வளர்றது உன் குழந்தைதான் சொல்லி அவளை சீர் செனத்தியோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போகணும் என்று கெடு விதிக்கிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

mp

முந்தைய எபிசோடுகளில், கெட்டி மேளம் ஒலிக்க வெற்றி பூஜா கழுத்தில் தாலி கட்டுகிறான். தாலி ஏறியதும் பூஜா மேடையை விட்டு இறங்கி வந்து சக்தியை இனி நீ இருக்க வேண்டாம் கிளம்பி விடு என்று அவமானப்படுத்துகிறாள்.  இதுதான் சரியான நேரம் என சக்தியின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி விட்டு கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே துரத்துகிறாள் பூஜா. இதைப் பார்த்ததும் செல்வ முருகனுக்கு வலிப்பு வந்து விழுகிறார். இது எல்லாம் சரண்யாவின் கனவு என தெரிகிறது. சரண்யா சக்தியிடம் நீ கர்ப்பம் இல்லை என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடு என்று சொல்ல சக்தி வாக்குக் கொடுத்தால் கொடுத்தது தான் என்று பிடிவாதமாக இருக்கிறாள். பின் ரங்கநாயகி சக்தியை கூப்பிட்டு தாலியை எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வரச் சொல்ல சக்தி தாலியை எல்லோரிடமும் எடுத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறாள். பிறகு கல்யாணத்துக்கு வந்திருந்த பெண்கள் சக்தியிடம் இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுங்கள் என்று சொல்கிறார்கள். பூஜா நீ எனக்கு ஆசீர்வாதம் பண்ணு என்று சக்தியிடம் கிண்டலாக சொல்கிறாள். சக்தி அமைதியாக நிற்கிறாள். இப்படி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க் சீரியலில், அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கதாநாயகனாக நடிக்கப்போகும் விஜய் டிவி ரக்ஷன்! ஹீரோயின் இவங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News