முதல் நாளே ஆபிஸில் மாஸ் காட்டிய மாரி - மாரி சீரியல் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: முதல் நாளே ஆபிஸில் மாஸ் காட்டிய மாரி, ஷாக்கான தாரா டீம்! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : Jul 5, 2023, 11:58 AM IST
  • முதல் நாளே ஆபிஸில் மாஸ் காட்டிய மாரி.
  • ஷாக்கான தாரா டீம்.
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
முதல் நாளே ஆபிஸில் மாஸ் காட்டிய மாரி - மாரி சீரியல் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாரி புது MD-யாக பொறுப்பேற்ற நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது, தேவி நூல் மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எல்லாரும் இந்த மேனேஜரிடம் இருந்து நமக்கு விடிவுகாலம் வராதா என்று புலம்பி கொண்டிருக்க மாரி என்ட்ரி கொடுக்கிறாள். அப்போது அந்த மேனேஜர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஒருவரிடம் குழந்தை பெத்துக்கணும்னா எதுக்கு வேலைக்கு வர? வேலைக்கு வந்தா வேலை செய்து தான் ஆக வேண்டும் என அநாகரிகமாக பேசி வெளியே செல்கிறான். 

மேலும் படிக்க | விஜய்யை போல திடீரென்று இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய தென்னிந்திய பிரபலம்..!

பிறகு மாரி அந்த பெண்ணிடம் சென்று உங்களுக்காக நான் வேலை செய்கிறேன், என்று சொல்லி எல்லா வேலைகளையும் செய்கிறாள், சாயங்காலம் மேனேஜர் எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கும் போது பெண்களை தொட்டு பேசி தகாத முறையில் நடந்து கொள்கிறான். மேலும் சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை பிடித்து கொண்டு கொடுக்க அதை பற்றி கேட்க மேனேஜர் இங்க எல்லாம் நான் தான், நீ யார்கிட்ட போய் சொல்றதா இருந்தாலும் சொல்லிக்க என்று திமிராக பேசுகிறான். பிறகு மாரிக்கு பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது நீ யாருமே புதுசா இருக்க? உனக்கு எப்படி சம்பளம் தர முடியும் என்று கேட்க மாரி அந்த புள்ளத்தாச்சி பொண்ணுக்காக வேலை செய்தேன் என்று சொல்ல மேனேஜர் அந்த பெண்ணை தவறாக பேசுகிறான். 

maari

இதனால் கோபமாகும் மாரி அந்த நபரை பளாரென அறைந்து நான் தான் புதுசா பதிவியேற்று இருக்க MD, இனிமே உனக்கு இங்க வேலை கிடையாது என்று துரத்தி அனுப்ப தொழிலாளர்கள் எல்லாரும் சந்தோசம் அடைகின்றனர். மறுபக்கம் விக்ரம் போலீஸ் பிரபாகரனை அழைத்து போனை கருப்பு உருவம் பறித்து கொண்டு போன விஷயத்தை சொல்ல அவர் என்னுடைய போனையும் அதே கருப்பு உருவம் தான் தூக்கிட்டு போயிடுச்சுனு என்று சொல்கிறார்.  விக்ரம் கண்டிப்பா இது தாராவோட ஆளா தான் இருக்கும் என சந்தேகப்படுகிறார், சீக்கிரம் அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என திட்டம் போடுகின்றனர். இங்கே மாரி வீட்டுக்கு வர அப்போது சூர்யா ஆபிசில் நடந்த விஷயங்களை பற்றி சொல்லி சந்தோசப்படுகிறான், மேலும் மாரியை பாராட்ட தாரா டீம் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவு..! எப்போது படம் ரிலீஸாகிறது தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News