மாரி சீரியல் அப்டேட்: வெடித்து சிதறிய பாம்.. கடைசி நொடியில் நடந்தது என்ன?

Maari Today's Episode Update: வெடித்து சிதறிய பாம்.. கடைசி நொடியில் நடந்தது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 12, 2023, 10:40 AM IST
  • பாம் விஷயம் அறிந்து அதொர்ச்சியடையும் முத்துப்பேச்சி.
  • சமயபுரம் செல்லும் முத்துப்பேச்சி.
  • ஜாஸ்மின் டீம் அதிர்ச்சி.
மாரி சீரியல் அப்டேட்: வெடித்து சிதறிய பாம்.. கடைசி நொடியில் நடந்தது என்ன?  title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மாரி’ சீரியல்.

மாரி: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. 

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாரி சாமி சிலையை தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்து கொண்டிருக்க ஊர் மக்கள் எல்லோரும் மாரிக்கு பாத பூஜை செய்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். 

பாம் விஷயம் அறிந்து அதிர்ச்சியடையும் முத்துப்பேச்சி

இதனையடுத்து முத்து பேச்சி வீட்டில் சண்முகத்துடன் பேசிக் கொண்டிருக்க அப்போது பாம் வைத்தவனை கூட்டிக்கொண்டு அவனது மனைவி இங்கே வருகிறாள். முத்து பேச்சியிடம் பணத்துக்காக ஆசைப்பட்டு பக்கத்து ஊரான சமயபுரம் கோவில் சிலையில் பாம் வைத்திருக்கிறார் என்ற விஷயத்தை சொல்ல இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் முத்துப்பேச்சி அவனைப் போட்டு அடி வெளுத்தெடுக்கிறார்.

சமயபுரம் செல்லும் முத்துப்பேச்சி

பிறகு பாமை எங்க வச்சிருக்க எப்போ வெடிக்கும் என்ற விவரங்களை கேட்டுக்கொண்டு சண்முகத்தை அழைத்துக் கொண்டு நேராக சமயபுரம் கிளம்புகிறார். பாம் வெடிக்க இன்னும் 15 நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில் முத்துப்பேச்சி வேக வேகமாக சமயபுரத்தை நோக்கி வருகிறார். 

மேலும் படிக்க | Custody Twitter Review:"கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர்தான்..” கஸ்டடி படத்தின் ட்விட்டர் ரிவியூ!

ஆவலாக காத்திருக்கும் கும்பல்

இங்கே ஜாஸ்மின், சகுந்தலா, ஸ்ரீஜா மற்றும் சங்கர பாண்டி ஆகியோர் பாம் வெடித்து சிதறும், மாரி செத்துப் போயிடுவாள் என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.  ஒரு வழியாக மாரி ஊரை சுற்றி வந்து சாமி சிலையை இறக்கி வைக்க கோவிலுக்குள் செல்லும்போது அங்கு வரும் முத்துப்பேச்சி நிறுத்துங்க என அனைவரையும் தடுத்து நிறுத்துகிறார். 

பிறகு சிலைக்குள் பாம் இருக்கிறது என சொல்லி அதை எடுத்துச் சென்று ஆளில்லாத இடத்தில் தூக்கி போட பாம் வெடித்து சிதறுகிறது. அதன் பிறகு மாரி, சூர்யா உட்பட எல்லோரும் முத்துப்பேச்சுக்கு நன்றி சொல்ல முத்துப்பேச்சி எங்க ஊரை சேர்ந்த ஒருத்தன் தான் பணத்துக்காக ஆசைப்பட்டு இப்படி பாம் வச்சுட்டான், அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என மன்னிப்பு கேட்க மாரி நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க என சொல்கிறாள். 

ஜாஸ்மின் டீம் அதிர்ச்சி 

அதன்பிறகு சூர்யா அவனை பாம் வைக்க சொன்னது யார் என கேட்க அதை பர்றி தனக்கு தெரியாது என அவன் கூறுகிறான். இதை இப்படியே விடமாட்டேன், கண்டிப்பா போலீசுக்கு தகவல் சொல்லி யார் என்று கண்டுபிடிப்பேன் என முத்துப்பேச்சி சொல்கிறார். மறுபக்கம் முத்துப்பேச்சி மாரியை காப்பாற்றியதை பார்த்து ஜாஸ்மின் டீம் அதிர்ச்சி அடைகிறது.

மேலும் படிக்க | இவங்களுக்கு வயசே ஆகாதா? ரம்யா கிருஷ்ணனின் கலக்கல் புகைப்படங்கள்!

மாரி கதையை முடிக்கிறேண்: ஜாஸ்மின்

யார் இவர்? இவளுக்கு எப்படி இந்த விஷயங்கள் எல்லாம் தெரியும்? என ஜாஸ்மின் கேள்வி கேட்க சகுந்தலா இவங்க முத்துப்பேச்சி, பக்கத்து ஊரு சேர்ந்தவங்க, இவங்க வார்த்தைக்கு அந்த ஊரே கட்டுப்பட்டு நிற்கும் என்ற விஷயங்களை சொல்கிறாள். அதன் பிறகு தாரா போன் செய்ய ஜாஸ்மின் தயக்கத்துடன் போனை எடுக்க வழக்கம்போல தோத்துட்டீங்களா என திட்டுகிறாள். மேலும் தாரா, ‘என்ன பண்ணுவீங்கனு எனக்கு தெரியாது மாரி திரும்பவும் என் வீட்டுக்கு வரக்கூடாது’ என சொல்ல ஜாஸ்மின் சகுந்தலாவை வச்சு அவ கதையை முடிக்கிறேன் என வாக்கு கொடுக்கிறாள்.

அதனைத் தொடர்ந்து நீலகண்டன் முத்துப்பேச்சியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மாரி அவருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுக்கும் சமயத்தில் வீட்டிலிருந்து முத்து பேச்சிக்கு போன் ஒன்று வருகிறது. வீட்டில் பசு மாடு கன்று குட்டி போட்டு இருப்பதாக சொல்ல இதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்பட முத்து பேச்சிக்கு குறி சொல்லும் பெண்மணி சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மாரி: சீரியலை எங்கு பார்ப்பது?

மாரி சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | இந்த ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி: ரிலீஸ் தேதி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News