மயங்கிய சரண்யா..உண்மையை அறிந்த ரங்கநாயகி..மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - Yuvashree | Last Updated : May 8, 2023, 02:36 PM IST
  • மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்.
  • சரண்யா திருமண மண்டபத்தில் மயங்கி விழுகிறாள்.
  • உண்மையை அறிந்த ரங்கநாயகி அதிர்ச்சிக்குள்ளாகிறாள்.
மயங்கிய சரண்யா..உண்மையை அறிந்த ரங்கநாயகி..மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் title=

ஜீ தொலைக்காட்சியின் சீரியல்களுள் பிரபலமான ஒன்றாக விளங்கும் மீனாட்சி பொண்ணுங்க தொடர் பல குடும்பங்களின் மனங்களை கவர்ந்துள்ளது. மகளிர்மட்டுமே நிறைந்த மீனாட்சியின் குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி போடப்படும் முடிச்சுகளும்தான் இந்த மீனாட்சி பொண்ணுங்க. இத்தொடர், பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை பார்க்கலாம் வாங்க. 

முந்தைய எபிசோட்:

ரங்கநாயகி சக்தியை கூப்பிட்டு தாலியை எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வரச் சொல்ல சக்தி தாலியை எல்லோரிடமும் எடுத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறாள். பிறகு ரங்கநாயகி வெற்றியிடம் தாலியை கட்டுமாறு கூற, கெட்டி மேளம் ஒலிக்க வெற்றி தாலியுடன் இருக்க, திடீரென அங்கே வந்த சாந்தா கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று கூறுகிறாள். சாந்தா, “இது சக்தியின் வாழ்க்கை அதை கெடுக்காதீர்கள்” என்று ஆவேசமாக சண்டையிட்டு பையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை கையில் எடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படி சீட் எட்ஜில் உட்கார வைத்த இந்த தொடரில் அடுத்து நடைபெற இருப்பது என்ன? 

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: தெரிய வந்த தீபாவின் தாலி ரகசியம்..ஜானகி எடுத்த முடிவு, நடக்க போவது என்ன?

இனி நடக்கவிருப்பது..

மீனாட்சி பொண்ணுங்க தொடரின் இன்றைய எபிசோடில் மண்ணென்னையை ஊற்றியபடி நிற்கிறாள் சாந்தா. கல்யாணத்தை நிறுத்த துர்காவும் யமுனாவும் மண்டபத்திற்கு வேறு வழியில் உள்ளே செல்கிறார்கள், வெற்றி பூஜாவின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு தயாராக இருக்கிறான்.

கெட்டி மேளம் ஒலிக்க அறையில் மின்சாரம் தாக்கி மயக்கத்திலேயே இருந்த ரோகித் கண் முழிக்கிறான். இங்கே வெற்றியை ரங்கநாயகி பூஜா கழுத்தில் தாலி கட்ட சொல்கிறாள். சக்தி கட்டி விடுவானோ என்று பதட்டத்தில் இருக்க திடீரென சரண்யா மயங்கி கீழே விழுகிறாள். அனைவரும் பரபரப்பாகிறார்கள்.

ரங்கநாயகிக்கு அதிர்ச்சி..

திருமணத்திற்கு வந்திருக்கும் ஒரு பெண் சரண்யா கர்ப்பமாக இருப்பதாக சொல்ல ரங்கநாயகி அதிர்ச்சி அடைகிறாள். கல்யாணத்தை நிறுத்துவதற்காக சக்தியுடன் சேர்ந்து திட்டமிடுகிறாய் என்று சொல்ல, சரண்யா உண்மையிலே கர்ப்பமாக இருப்பதை கூறுகிறாள். அதோடு அசோக் வந்து போனதை நானே பார்த்திருக்கிறேன் என்று செல்வமுருகன் சொல்கிறார். இதனால் என் மகளுக்கு ஒரு பதில் சொல்லுங்கள் என்று சரளா கேட்க செல்வ முருகன் இந்த கல்யாணம் நடக்காது என்கிறார். 

காணத்தவராதீர்கள்..

மயங்கி விழுந்த சரண்யா..உண்மையை அறிந்த ரங்கநாயகி..அடுத்து நடக்கவிருப்பது என்ன? என்பது போல இப்படி பரபரப்பான சூழ்நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | செந்தில் வெறுப்பேத்திய அமுதா.. உமா செய்யும் சூழ்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News