மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்:முதலிரவுக்காக காத்திருந்த சக்திக்கு வெற்றி வைத்த ட்விஸ்ட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

Written by - Yuvashree | Last Updated : May 16, 2023, 01:00 PM IST
  • தமிழ் சீரியல்களுள் பிரபலமான ஒன்று மீனாட்சி பொண்ணுங்க.
  • முதலிரவை எதிர்நோக்கி சக்தி காத்துக்கொண்டிருக்கிறாள்.
  • வெற்றி ஆவலோடு இருக்கும் சக்திக்கு ட்விஸ்ட் வைக்கிறான்.
மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்:முதலிரவுக்காக காத்திருந்த சக்திக்கு வெற்றி வைத்த ட்விஸ்ட் title=

தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களுள் முதலிடத்தை பிடித்திருக்கும் தொடர், மீனாட்சி பொண்ணுங்க. மகளிர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்று நடக்கும் கதைதான் இதன் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை தெரிந்து கொள்வோமா? 

இதுவரை நடந்தது..

மீனாட்சி பொண்ணுங்க தொடரின் நேற்றைய எபிசோடில் பூஜாவை ரங்கநாயகி இங்கிருந்து போய் விடு என்று சொல்ல பூஜா தோட்டத்திலிருந்து அரிவாள் எடுத்து வந்து தன் கழுத்தில் வைத்துக் கொண்டு இங்கிருந்து என்னை போக சொன்னால் நான் வெட்டிக் கொள்வேன் என நாடகமாடுகிறாள்.

இதனால் மனசு மாறிய ரங்கநாயகி பூஜா இங்கே இருக்கட்டும் என்று விட்டு விடுகிறாள். அனைவரும் சென்று விட பூஜா சக்தியிடம் இங்கிருந்து என்னை யாரும் வெளியே அனுப்ப முடியாது என்று சவால் விட்டு செல்கிறாள்.
சக்தி இன்று இரவு நமக்கு முதலிரவு ரெடியாக இருங்க என்று சொல்ல, வெற்றி இதற்கெல்லாம் நான் மசிய மாட்டேன் என்று கோபமாக கூறுகிறான். இதையடுத்து இன்றைய எபிசோடில் நடக்கவிருப்பது என்ன என்று பார்ப்போமா?

மேலும் படிக்க | Veerapandiya Kattabomman: “வரி வட்டி கிஸ்தி..” 64 ஆண்டுகளை கடந்தும் அழியாத காவியமாய் வீரபாண்டிய கட்டபொம்மன்!

இன்றைய எபிசோட்:

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி வெற்றி இருக்கும் இடத்திற்கெல்லாம் சென்று, பேச முற்பட, வெற்றி விலகி செல்கிறான். அதன் பிறகு வெளியே கிளம்பும் வெற்றிக்கு சக்தி வாசல் வரை சென்று வழி அனுப்பி இன்று நமக்கு முதலிரவு சீக்கிரமாக வந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். 

Meenakshi Ponnunga

அதன் பிறகு வெற்றிக்காக சக்தி காத்திருக்கிறாள். சக்தி தன் அறையை முதலிரவு அறையை போல அலங்கரிக்க, இதை பார்த்த வெற்றி ஏதோ யோசித்தவாறு அங்கிருந்து செல்கிறான்.

சபரிமலைக்கு மாலை போட்ட வெற்றி:

பிறகு சரண்யா சக்தியிடம் வந்து, வெற்றி சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கும் விஷயத்தை சொல்ல, நான் சாமியாகி விட்டேன் என்று வெற்றி 
சக்தியை கலாய்க்கிறான். 

Meenakshi Ponnunga

காணத்தவறாதீர்கள்..

வெற்றி மாலை போட்டுக்கொண்ட விஷயத்தை கேள்விபட்டு அதிர்ந்து போகும் சக்தி, ஒவ்வொறு முறையும் வெற்றியுடன் பேச வரும் போதும் சாமி சரணம் என்று சொல்லி வெற்றி விலகி போகிறான்‌. இப்படி அந்த நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Jigarthanda Doube X: ஜிகிர்தண்டா 2 ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்..படு குஷியில் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News