கர்ப்பத்திற்கு பின் காதலரை அறிமுகப்படுத்திய இலியானா: வைரலாகும் போட்டோ

நடிகை இலியானா தற்போது திருமணம் செய்யாமல் கர்ப்பமாக இருக்கின்ற வேலையில் காதலனோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 4, 2023, 04:01 PM IST
  • கர்ப்பமாக இருக்கும் நடிகை இலியானா.
  • தெலுங்கு திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் இலியானா.
கர்ப்பத்திற்கு பின் காதலரை அறிமுகப்படுத்திய இலியானா: வைரலாகும் போட்டோ title=

நடிகை இலியானா 2006 ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமானார். தெலுங்கில் தேவதாசு படம் மூலம் அறிமுகமான அவர், அதே வருடம், கேடி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு மட்டும் அவர் ஆறு படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த அவருக்கு, தமிழில் பெரும் வரவேற்பை கொடுத்த படம் நண்பன். 

விஜய் - ஷங்கர் என வித்தியாசமான கூட்டணியில், இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான நண்பன் படத்தில், இலியானா விஜய்க்கு ஜோடியாக ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின், தமிழில் இருந்து ஒதுங்கிவிட்ட இலியானா, 2012 ஆம் ஆண்டில், பர்ஃபி படம் மூலம் இந்தியில் அறிமுகமானாக் அடுத்து, 8 படங்களில் தொடர்ந்து இந்தியில் நடித்தார். மேலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இலியானா. இவர் நடிப்பில் கடைசியாக பிக் புல் என்கிற பாலிவுட் படம் வந்தது. தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ள சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!

இதற்கிடையில் நடிகை இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். அவருடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த இலியானா, அவரை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார். இதன் பின்னர் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருப்பினும் அவர் அதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். அத்துடன் குழந்தையின் உடையின் புகைப்படம் மற்றும் தன் கழுத்தில் இருக்கும் செயின் டாலரில் அம்மா என்கிற வாசகம் இருப்பதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்த செய்தியை வெளியிட்டு இருந்தார். இலியானாவின் இந்தப் பதிவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர், ஆனால் சிலர் முதலில் உங்கள் கணவர் யார் என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பி கிண்டல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இதுநாள் வரை தனது காதலர் யார் என்று கூறாமல் இருந்த இலியானா தனது காதலருடன் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். ஆனால் இணையவாசிகள் அந்த போட்டோவை பார்த்து "ஒருவேளை நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கோமோ, அல்லது திருமண மோதிரமாக இருக்கும் என்று குழப்பத்தில் கமெண்ட் செய்து வருகின்றது. அதுமட்டுமின்றி அதில் தான் ‘பேபிமூனுக்காக’ சென்றுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை, இலியானா தனது 'பேபிமூனில்' இருப்பதை தனது ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். அவர் ஒரு கடற்கரையில் இருந்து சன்னி கிளிப்பைப் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்… கேளாய் பூமனமே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News