நினைத்தேன் வந்தாய் அப்டேட்: சவால் விடும் சுடர்.. கூட்டு சேர்ந்து இந்து, மனோகரி போடும் திட்டம்

Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 3, 2024, 01:13 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்
  • பிளான் போடும் மனோகரி, செல்வி.
  • குழந்தைகளை மோடிவேட் செய்யும் சுடர்.
நினைத்தேன் வந்தாய் அப்டேட்: சவால் விடும் சுடர்.. கூட்டு சேர்ந்து இந்து, மனோகரி போடும் திட்டம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் எழிலிடம் சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சுடர் குழந்தைகளை ஸ்கூல்ல நடக்கிற போட்டியில் கலந்துக்க வச்சு ஜெயிக்க வைக்கிறேன். உங்க பேரு குழந்தைகளால் காப்பாற்றுவேன் என்று சொல்கிறாள். இதை எடுத்து உனக்கு உறுதுணையா நான் இருக்கேன். குழந்தைகளை நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஜெயிக்க வைக்கலாம் என்று சொல்கிறாள்.

பிளான் போடும் மனோகரி, செல்வி

இதை அடுத்து மனோகரி மற்றும் செல்வி இருவரும் கூட்டு சேர்ந்து இந்த போட்டியில் குழந்தைகளை தோற்க வைத்து சுடரை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று பிளான் போடுகின்றனர்.

மேலும் படிக்க | பிக் பாஸ் 8 அப்டேட்.. இந்த தேதியில் துவங்கப் போகிறது.. போட்டியார்கள் விவரம் இதோ

குழந்தைகளை மோடிவேட் செய்யும் சுடர்

அடுத்ததாக குழந்தைகள் அனைவரும் எப்படி கேமில் கலந்து கொண்டு ஜெயிப்பதே இன்று பயத்தில் இருக்க சுடர் நான் காணாமல் போனபோது நீங்க தானே தைரியமா என்ன தேடி வந்தீங்க.. அப்படி இருக்கும் போது உங்களால கண்டிப்பாக ஜெயிக்க முடியும் என்று மோட்டிவேட் செய்கிறாள். 

இதைக் கேட்டு குழந்தைகளும் கண்டிப்பாக ஜெயித்து காட்டுவோம் என்று சவால் விட்டு மறுநாள் காலையில் ஸ்கூலில் போட்டிக்காக பெயர் கொடுக்கின்றனர். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News