நினைத்தேன் வந்தாய் அப்டேட்: திருட்டு தனமாக சுடரின் சாப்பாட்டை சாப்பிட்டு கண் கலங்கும் எழில்.. நடந்தது என்ன?

Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 29, 2024, 01:43 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்.
  • இந்துவை நினைத்து கண் கலங்கும் எழில்.
  • பிள்ளைகள் ஸ்கூலில் நடக்கும் கம்படீஷன்.
நினைத்தேன் வந்தாய் அப்டேட்: திருட்டு தனமாக சுடரின் சாப்பாட்டை சாப்பிட்டு கண் கலங்கும் எழில்.. நடந்தது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் சமைத்த பிரியாணியை சாப்பிட்ட கவின் சூப்பராக இருக்கு என்று சொன்னதும் மற்ற குழந்தைகளும் வந்து விட இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, அபி பிரியாணியை சாப்பிட்டு பார்த்து அப்படியே அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்ல மற்றவர்களும் சாப்பிட்டு பார்த்து ஆமாம் அப்படி தான் இருக்கு என்று சொல்கின்றனர். அடுத்து கனகவல்லி வர அவளையும் டேஸ்ட் செய்து பார்க்க சொல்ல பிரியாணியை சுவைத்த கனகவல்லி அப்படியே இந்து சமைத்த மாதிரியே இருக்கு, நீ எப்படி சமைப்பனு எனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது இது எப்படி இந்து சமைத்த மாதிரி வந்தது? யார் சமைத்தது என்று கேட்க சுடர் நான் தான் சமைத்தேன் என்று சொல்கிறாள். 

இந்துவை நினைத்து கண் கலங்கும் எழில்

அடுத்து எழில் கீழே வர அவனையும் இந்து சமைத்தது போலவே இருப்பதாக சொல்லி சாப்பிட கூப்பிட சுடர் சமைத்தது என்று தெரிந்ததும் வேண்டாம் என்று மேலே சென்று விடுகிறான். இந்து சமைத்தது போல் இருப்பதாக எல்லாரும் சொன்னதால் எல்லாரும் தூங்கிய பிறகு வந்து சாப்பிடும் எழில் இந்துவை நினைத்து கண் கலங்க எழில் சாப்பிடுவதை பார்த்து இந்து சந்தோசப்படுகிறாள். 

மேலும் படிக்க | Rajinikanth : மோடியின் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரஜினி! கையெடுத்து கும்பிட்டார்..

பிள்ளைகள் ஸ்கூலில் நடக்கும் கம்படீஷன்

அடுத்து பிள்ளைகள் எல்லாரும் ஸ்கூலில் நடக்கும் கம்பிட்டேஷனில் கலந்து கொள்ள போவதாக சொல்கின்றனர், ஆனால் அப்பாவுக்கு தெரிந்தா திட்டுவாரு என்றும் பயப்பட சுடர் நீங்க கலந்துக்கோங்க நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறாள். அதன் பிறகு பிள்ளைகள் கீழே வர எழிலும் ஹாஸ்பிடல் கிளம்பி வர மனோகரி இன்னைக்கு உனக்கு சிறந்த டாக்டர் விருது தரப்போறாங்க, அதுக்கு நீ கண்டிப்பா வரணும் என்று சொல்லி கூப்பிட கனகவல்லி பிள்ளைகளையும் கூட்டி செல்ல சொல்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Amala Paul : அமலா பாலிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததா இல்லையா? இதுவரை வெளியான தகவல்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News