நினைத்தேன் வந்தாய் அப்டேட்: எழிலுக்குள் இருக்கும் காதல்.. சுடருக்குள் உருவாகும் மாற்றம்

Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 17, 2024, 03:35 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்
  • திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் இந்து
  • சுடருக்கு எழில் மீது சாஃப்ட் கார்னர்.
நினைத்தேன் வந்தாய் அப்டேட்:  எழிலுக்குள் இருக்கும் காதல்.. சுடருக்குள் உருவாகும் மாற்றம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் எழில், இந்து காதல் குறித்து வார்டனிடம் கேட்க பிளாஷ்கட் ஓபனான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது இந்துவை பார்த்த எழில் காதலில் விழ மறுநாள் காலையில் ரெடியா இரு என்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் தன்னுடைய குடும்பத்தை கூட்டி சென்று ஸ்டேஜை டெக்கரேட் செய்து இந்துவை அறிமுகம் செய்து வைத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறான். 

திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் இந்து

இந்துவை தான் கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொல்லி குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க இந்துவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். இதனையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என வார்டன் பிளாஷ்கட்டை சொல்லி முடிக்கிறார். 

மேலும் படிக்க | சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

சுடருக்கு எழில் மீது சாஃப்ட் கார்னர்

இதை எல்லாம் கேட்ட சுடருக்கு எழில் மீது ஒரு சாப்ட் கார்னர் உருவாகிறது, கோவக்கார எழிலுக்குள் இப்படி ஒரு காதல் கதை இருக்கா என்று ஆச்சரியப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News