ரூட்டை மாற்றிய ராஜமெளலி- அடுத்த படத்தோட கதை இதுதானாம்!

ராஜமெளலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவின் படத்தை இயக்கவுள்ள நிலையில் இப்படத்தின் கதை தொடர்பான தகவல் கசிந்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 7, 2022, 01:43 PM IST
  • ராஜமெளலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவின் படத்தை இயக்கவுள்ளார்.
  • மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தின் கதை தொடர்பான தகவல் கசிந்துள்ளது.
  • கதை தொடர்பாக மகேஷ் பாபு சில நிபந்தனைகளை விதித்துள்ளாராம்.
ரூட்டை மாற்றிய ராஜமெளலி- அடுத்த படத்தோட கதை இதுதானாம்! title=

பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் பான் - இந்தியா இயக்குநராக உருவெடுத்துள்ளார் ராஜமெளலி.

தொடர்ச்சியாகப் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் அவரது படங்கள், வியாபார ரீதியாகவும் கோடிக்கணக்கில் வசூலைக் குவிக்கின்றன. இதனால் இவரது படங்களுக்கு எவ்வளவு பணத்தையும் கொட்டிச் செலவழிக்கத் தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளனர்.

ராஜமெளலியைப் பொறுத்தவரை அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தையடுத்து, அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இந்தப் படமுமு பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் தொடர்பான சில சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

                                                                            

அதாவது ராஜமெளலியின் சமீப காலப் படங்கள் பீரியட் மற்றும் இதிகாசக் கதைகளைப் போன்ற தோற்றம் கொண்டவையாகவே அமைந்திருந்தன. ஆனால் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படம் இந்த வகைமையிலிருந்து விலகியிருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பீரியட் படங்களில் நடிக்கத் தற்போது தனக்கு ஆர்வமில்லை எனவும் சமகாலத்தைப் பிரதிபலிக்கக்கூடிய படங்களையே தனது ரசிகர்கள் தற்போது எதிர்பார்ப்பதாகவும் ராஜமெளலியிடம் மகேஷ் பாபு தெரிவித்தாராம். அந்த அடிப்படையில்தான் இந்தப் படத்தில் பீரியட் சமாச்சாரம் ஏதும் இல்லாமல் அட்வெஞ்சர் திரில்லர் படமாக இது எடுக்கப்படவுள்ளதாம். இதுவும் பான் இந்தியா ரிலீஸாகவே வெளியாகவுள்ளதாம்.

                                                                

அதேபோல மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, பொதுவாக பான் இந்தியா ரிலீஸாக வெளியாகும் அண்மைக்கால தென்னியந்தியப் படங்களில், வியாபாரம் உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்தி நடிகர்கள் அல்லது நடிகைகள் இணைக்கப்படுவதுண்டு. அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில்கூட ஆலியா பட் நடித்திருந்தார்.

ஆனால் இந்தப் படத்தில் இந்தி நடிகைகள் யாரும் நடிக்கவில்லையாம். அதற்குப் பதிலாக தெலுங்கு அல்லது தென்னிந்திய நடிகை யாரேனும் ஒருவர்தான் இதில் நடிக்கவுள்ளாராம். அதே நேரம் இந்தி நடிகர்கள் யாரும் இதில் நடிக்கிறார்களா எனும் விபரம் இன்னும் வெளியாகவில்லை.

                                  

மேலும் படிக்க | அடுத்தடுத்த வெற்றி.. ‘ஜெட்’ வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய ‘KGF’ டைரக்டர்! - அதுவும் இத்தனை கோடியா?

 

சில நாட்களுக்கு முன் பான் - இந்தியா படங்கள் தொடர்பாக பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாத் துறையினர் இடையே வார்த்தைப் போர் மூண்டது. இந்நிலையில் மகேஷ் பாபுவின் படத்தில் இந்தி நடிகை இல்லை எனக் கூறப்படுவது, மேற்கண்ட சர்ச்சையின் விளைவால் உருவானதா அல்லது யதார்த்தமாக அமைந்த ஒன்றா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்!

மேலும் படிக்க | ராஜமெளலி படத்தில் நடிப்பவர்களைத் துரத்தும் வித்யாசமான சோகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News