சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு ஷாக் கொடுத்த சீதா.. ராம் செய்தது என்ன?

Seetha Raman Today's Episode Update: சுபாஷை வைத்து ராம் செய்த விஷயம்.. மகாவுக்கு ஷாக் கொடுத்த சீதா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 23, 2023, 01:36 PM IST
  • பயத்தில் நடுநடுங்கும் சுபாஷ்.
  • கண் கலங்கும் மீரா.
  • பத்திரிகையை கிழித்து போடும் மகா.
சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு ஷாக் கொடுத்த சீதா..  ராம் செய்தது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் சுபாஷை பிளாக் மெயில் செய்து பத்திரிக்கை பிரிண்ட் அடிக்கும் இடத்திற்கு வர வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பயத்தில் நடுநடுங்கும் சுபாஷ்

அங்கு வரும் சுபாஷை சொப்னா வரவேற்று மீரா உட்பட எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்க சுபாஷ் பயத்தில் நடுநடுங்கி போய் நின்று கொண்டிருக்கிறான். சீதாவும் ராமும் மீராவுக்கு ரெண்டு அண்ணன்கள் முதல் அண்ணன் ரொம்ப பேட், ரெண்டாவது அண்ணன் அத விட ரொம்ப மோசம், அவருக்கு சின்ன வீடு எல்லாம் இருக்கு என்று சொல்ல சொப்னா கடுப்பாகி அந்த மாதிரி ஆள் எல்லாம் என் கையில் கிடைச்சா அவ்வளவு தான் என்று ஆவேசப்பட சுபாஷுக்கு பயம் அதிகமாகிறது. 

உடனே சுபாஷ் எதுக்கு வந்தோமோ அந்த வேலையை பார்க்கலாம் என்று சொல்ல அவனிடம் மீரா கல்யாணத்திற்காக பத்திரிக்கைக்கு எழுதிய பேப்பரை எடுத்து கொடுக்க அதை படித்து பார்த்த அவன் என்ன இப்படி தப்பு தப்பா எழுதி இருக்கு என்று சொல்ல ராம் நான் தான் எழுதினேன் எனக்கு முன்னபின்ன இப்படியெல்லாம் எழுதி பழக்கம் இல்லை என்று சொல்கிறான். 

மேலும் படிக்க | விண்வெளி அறிவியல் குறித்து வெளியான இந்திய படங்கள்: டாப் லிஸ்டில் தமிழ் படம்!

கண் கலங்கும் மீரா

பிறகு சுபாஷ் அதனை திருத்தி எழுதி பிரிண்ட் செய்ய கொடுக்க பத்திரிக்கை ரெடி ஆனதும் மீரா கையில் கொடுக்க அவள் கண் கலங்கிய நிலையில் வாங்கி கொள்கிறாள்.

ராம் மற்றும் சீதா சொப்னாவிடம் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இந்த கல்யாணத்துக்கு வரணும் என்று சொல்ல சொப்னா கண்டிப்பா வருவோம் என்று வாக்கு கொடுக்கிறாள். அடுத்து மீராவும் சீதாவும் வீட்டிற்கு வர பத்திரிகையை பெரியவங்க கையில் கொடுத்து பூஜையறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று சீதா சொல்லி கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மகாவும் சேதுவும் கீழே வருகின்றனர். 

பத்திரிகையை கிழித்து போடும் மகா

அவர்களிடம் சீதா பத்திரிகையை கொடுத்து பூஜை செய்ய சொல்ல மகா கோபப்பட்டு மீராவை திட்டு பத்திரிகையை கிழித்து போட மீரா சோகமாகிறாள், சீதா இந்த கல்யாணத்தை நான் நடத்தி காட்டுவேன் என்று மகாவுக்கு சவால் விடுகிறாள். மறுநாள் காலையில் சீதா பாட்டு பாடி சாமி கும்பிட்டு கொண்டிருக்க மகா கோபத்தோடு கீழே வர அர்ச்சனாவும் இவர்களுடன் சேர்ந்து பத்திரிகையை வைத்து பூஜை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | “ரஜினிக்கே 6 படங்கள் தோல்விதான்..” சர்ச்சையில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News