சத்யனின் காலில் விழுந்து கதறும் சீதா..இன்றைய சீதா ராமன் அப்டேட் இதுதான்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த தொடரின் இன்றைய அப்டேட் என்ன தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 1, 2023, 06:03 PM IST
  • சத்யனின் காலில் விழுந்து கதறும் சீதா.
  • மகாலட்சுமியின் எண்ணங்கள் பலிக்கிறது.
  • இன்றைய பரபரப்பு ட்விஸ்ட்கள் என்ன?
சத்யனின் காலில் விழுந்து கதறும் சீதா..இன்றைய சீதா ராமன் அப்டேட் இதுதான்! title=

பலரது இல்லங்களில் குடும்பத்தாரின் மனம் கவர்ந்த சீதா ராமன் தாெடரில் அடுத்தடுத்து பல ட்விஸ்டுகள் நிகழ உள்ளன. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரின் இன்றைய அப்டேட் இதோ. 

 

முந்தைய எபிசோடுகள்:

சீதா ராமன் தொடரின் முந்தைய எபிசோடுகளில், ராம் சீதாவை சித்தியிடம் மன்னிப்பு கேட்க கூறினான். ஆனால் சீதாவோ,  அதற்கு மறுப்பு தெரிவிக்க அவன் அதை அர்ச்சனாவிடம் கூறினான். அதற்கு அர்ச்சனா 'நான் உனக்கு ஒரு ஐடியா சொல்கிறேன்' என அவனிடம் கூறினாள். 

 

இதையடுத்து, சீதாவை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்பதற்காக ராம், மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து விடுவேன் என மிரட்டினான். அவனை கீழே குதிக்க வேண்டாம் என சீதா அழுதுகொண்டே கெஞ்சினால். நடந்து முடிந்த இந்த எபிசோடின் தொடர்ச்சியாக இன்றும் பல திடுக்கிடும் திருப்பங்களுடன் சீதா ராமம் சீரியல் தொடர்கிறது. 

 

Seetha Raman

இன்றைய எபிசோட்:

சீதா ராமன் தொடரில் இன்றைய எபிசோடில் ராம் சித்தியிடம் சீதாவும் சத்யனும் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் கீழே குதித்து விடுவேன் என மொட்டை மாடியில் இருந்து மிரட்ட சீதா சத்யனுக்கு போன் செய்து மகாலட்சுமியிடம் வந்து மன்னிப்பு கேட்குமாறு கேட்க சத்யா மறுப்பு தெரிவிக்கிறான். 

 

மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: குமரேசன் கைக்கு போகும் பள்ளிக்கூடம், கடைசி நொடியில் செம ட்விஸ்ட்

 

சீதாவை கெஞ்ச விடும் சத்யன்:

கீழே குதித்து விடுவேன் என பயமுறுத்தும் ராமிடம் கதையின் நாயகி சீதா “சத்யன் வர மாட்டேன்னு சொல்றாரு” என கூறுகிறார். ராம், “சத்யன் வந்து மன்னிப்பு கேட்கணும் இல்லனா நான் கீழே இறங்க மாட்டேன்” என உறுதியாக சொல்லிவிடுகிறான். இதனால்,  சீதா நேரடியாக சத்யன் வீட்டுக்கு செல்ல முடிவெடுக்கிறாள்.

 

அதன் பிறகு சீதா மற்றும் மீரா இருவரும் சத்யன் வீட்டுக்கு கிளம்ப, ராமிடம் “நாங்க சத்தியனை பார்க்க போயிட்டு வரோம் நீங்க அதுவரைக்கும் எந்தவித தப்பான முடிவையும் எடுத்து விடாதீங்க” என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். 

 

வில்லியின் பக்கம் வீசும் காற்று:

மறுபக்கம் மகாலட்சுமி நம் திட்டம் பலித்துவிட்டது என சந்தோஷமாக உட்கார்ந்து இருக்க சத்யன் வீட்டுக்கு வரும் சீதா, வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை சொல்லி மகாலட்சுமியிடம் வந்து மன்னிப்பு கேட்க சொல்கிறாள். ஆனால் ராம், “எனக்கு மகாலட்சுமிக்கும் ஏகப்பட்ட பகை இருக்கு, என்னால மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க முடியாது ராம் கீழே குதிப்பதால் யாருக்கு நஷ்டம் எனக்கு என்ன வந்தது” என சொல்ல சீதா அதிர்ச்சி அடைகிறாள். 

 

நடக்கப்போவது என்ன?

இதனால் சீதா சத்தியனின் காலை பிடித்து ராமுக்காக மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்குமாறு கெஞ்சி கேட்கிறாள். சீதாவின் அத்தனை கெஞ்சலுக்கு பிறகும் சத்யன் கீழே இறங்கி வர மறுக்கிறான். 

 

காணத்தவராதீர்கள்:

நொடிக்கு நொடி பரபரப்பாக பாேய் கொண்டிருக்கும் சீதா ராமம் தொடரில், அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள நீங்களும் ஆவலுடன் இருந்தால், சீதாராமன் சீரியலை இரவு 7:30 மணிக்கு தொலைக்காட்சியில் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள். 

 

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சீதாவுக்கு செக் வைத்த மகாலட்சுமி.. சத்யன் கொடுத்த அதிர்ச்சி!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News